Friday, October 02, 2015
விருதுநகரில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் எதிரே
கொட்டப்படும் பல்வேறு கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை
உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வெயிலுகந்தம்மன்
திருக்கோயில் உள்ளது. இப்பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு
செய்வதற்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து பொருள்கள் வாங்குவதற்காகவும்
வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பழக்கடைகள், பூக்கடைகள், சிற்றுண்டி
நிலையங்கள் என பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும்
கழிவுகள் மற்றும் குப்பைகளை கோயில் எதிரே கொட்டுகின்றனர். இதனால்
ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும்
பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே
நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
விரும்புகின்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில்,
நகராட்சி பகுதியில் குப்பைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அகற்றுவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயில் வளாகம் முன்பு
குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என
அவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment