Tuesday, October 13, 2015

சூரிய மின்சக்தி பம்பு
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சூரிய மின்சக்தி நிலையான பேனல் அமைக்கவும், ஆழ்குழாய் கிணற்றில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்கவும், திறந்தவெளி கிணறு, தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகளிலும் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க மொத்த தொகையில் 80 சதவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் அடிப்படை விலையில் 80 சதவீதம் மானியம் போக 20 சதவீத தொகை மற்றும் அதற்கான வரியை விவசாயிகள் செலுத்தினால் போதும். நிலையான பேனல்கள் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 822 மதிப்பில் அமைக்கப்படும்.
80 சதவீத மானியம்
இதற்கு விவசாயின் பங்களிப்புத்தொகை ரூ.95 ஆயிரத்து 342 மட்டுமே, திறந்தவெளி கிணறுகளில் ரூ.5 லட்சத்து 1 ஆயிரத்து 512 மதிப்பில் சூரிய மின்சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுக்கப்படுகிறது.
இதற்கான விவசாயியின் பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 512 ஆகும். 80 சதவீத மானியாத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விசை குழாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய தகுதியுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையை அணுகி கம்ப்யூட்டர் பட்டா அசல், அடங்கல் பட்டா, விசைக்குழாய் அமையும் இடத்தின் நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சாதிச்சான்று நகல் (பட்டியல் வகுப்பினர் மட்டும்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் சூரிய ஒளி விசைக்குழாயை நீர்ப்பாசனம் செய்வதற்கு மட்டுமே உபயோகம் செய்வேன் என உறுதி அளிக்க வேண்டும்.
எங்கு அணுகுவது?
விருதுநகர் மாவட்டத்தில் சூரிய ஒளிக்கு ஏற்ப தானாக இயங்கும் பேனல்கள் மூலம் 21 விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்றிலும், 39 விவசாயிகள் திறந்தவெளி கிணற்றிலும், 2 விவசாயிகள் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலும் ஆக மொத்தம் 62 விவசாயிகள் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைத்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment