Tuesday, October 13, 2015
அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி சாலை விலக்கில்
தம்மநாயக்கன்பட்டி மற்றும் பரட்டைநத்தம் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும்
பேருந்து வசதி கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சாலை மறியலுக்கு பி.கல்லுமடம் ஊராட்சி மன்றத்
தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் வேடநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர்
வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள்
அருப்புக்கோட்டையிலிருந்து இலுப்பையூர், ஆலடிபட்டி வழியாக அம்மன்பட்டி வரை
போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், போதிய சாலை வசதி செய்து
தருமாறும் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறை
அதிகாரிகளும், ம.ரெட்டியபட்டி காவல் துறையினரும் அவர்களிடம் சமரசப்
பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதுபற்றி கல்லுமடம் மற்றும் வேடநத்தம் பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களுக்கு போதிய சாலை வசதியில்லை.
அத்துடன் பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. நடந்து வந்து தான் பேருந்தில் பயணம்
செய்ய வேண்டி உள்ளது.
எனவே அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment