Tuesday, October 13, 2015
அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி சாலை விலக்கில் 
தம்மநாயக்கன்பட்டி மற்றும் பரட்டைநத்தம் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும்
 பேருந்து வசதி கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  இச்சாலை மறியலுக்கு பி.கல்லுமடம் ஊராட்சி மன்றத் 
தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் வேடநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் 
வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். 
  அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் 
அருப்புக்கோட்டையிலிருந்து இலுப்பையூர், ஆலடிபட்டி வழியாக அம்மன்பட்டி வரை 
போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், போதிய சாலை வசதி செய்து 
தருமாறும் கோஷம் எழுப்பினர்.
 தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறை 
அதிகாரிகளும், ம.ரெட்டியபட்டி காவல் துறையினரும் அவர்களிடம் சமரசப் 
பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
   இதுபற்றி கல்லுமடம் மற்றும் வேடநத்தம் பொதுமக்கள் கூறியதாவது:
 எங்கள் கிராமங்களுக்கு போதிய சாலை வசதியில்லை. 
அத்துடன் பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. நடந்து வந்து தான் பேருந்தில் பயணம் 
செய்ய வேண்டி உள்ளது.
     எனவே அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment