Friday, January 08, 2016
தூத்துகுடியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்– மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜமன்னார் (65). இவருடைய மனைவி உஷா. இவர்கள் தூத்துக்குடி குமாரபுரம் பகுதியில் மர நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை நடத்துவதற்காக ராஜமன்னார் தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முந்பு ராஜமன்னார் தனது நிறுவனத்தை குத்தகைக்கு விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதைக்கண்ட தூத்துக்குடி மாவட்ட மாப்பிள்ளையூரணி டேவீஸ்புரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பூபதி ராஜன் (35) என்பவர் ராஜமன்னார் நிறுவனத்தை நடத்த விரும்பினார். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பூபதி ராஜன் ரூ.10 லட்சத்தை ராஜமன்னாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பூபதி ராஜன் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமன்னார் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவே நிறுவனத்தை காலி செய்யுமாறு பூபதிராஜனிடம் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜன் ராஜமன்னாரிடம் தான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பூபதி ராஜன் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி மனுவை விசாரித்து வழக்குப்பதிவு செய்ய தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாளமுத்து நகர் விசாரித்து, பூபதி ராஜனிடம் மோசடியில் ஈடுபட்டதாக ராஜமன்னார், அவருடைய மனைவி உஷா(58), மகன் முகுந்தன் (35), மகள் காயத்ரி(37) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
02.09.2014 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தை மாவட்ட ஆட்சிதலைவர் திர...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
0 comments:
Post a Comment