Friday, January 08, 2016
தூத்துகுடியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்– மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தூத்துக்குடி பெருமாள் நகரை சேர்ந்தவர் ராஜமன்னார் (65). இவருடைய மனைவி உஷா. இவர்கள் தூத்துக்குடி குமாரபுரம் பகுதியில் மர நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தை நடத்துவதற்காக ராஜமன்னார் தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முந்பு ராஜமன்னார் தனது நிறுவனத்தை குத்தகைக்கு விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதைக்கண்ட தூத்துக்குடி மாவட்ட மாப்பிள்ளையூரணி டேவீஸ்புரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் பூபதி ராஜன் (35) என்பவர் ராஜமன்னார் நிறுவனத்தை நடத்த விரும்பினார். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பூபதி ராஜன் ரூ.10 லட்சத்தை ராஜமன்னாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பூபதி ராஜன் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜமன்னார் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவே நிறுவனத்தை காலி செய்யுமாறு பூபதிராஜனிடம் வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜன் ராஜமன்னாரிடம் தான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து பூபதி ராஜன் தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி மனுவை விசாரித்து வழக்குப்பதிவு செய்ய தாளமுத்து நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாளமுத்து நகர் விசாரித்து, பூபதி ராஜனிடம் மோசடியில் ஈடுபட்டதாக ராஜமன்னார், அவருடைய மனைவி உஷா(58), மகன் முகுந்தன் (35), மகள் காயத்ரி(37) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டில் ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார். திருப...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment