Tuesday, January 05, 2016
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 23–ந் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முத்தம்மாள் காலனி, தனசேகரன்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தன. நெல்லை மாவட்டத்ல் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் கடந்த மாதம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேத ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தற்போது மத்திய குழு மீண்டும் தமிழகம் வந்துள்ளது. இன்று அக்குழுவினர் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
பின்னர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு வர உள்ளனர். மத்திய அரசின் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
அவர்கள் முதலில் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். பின்னர் நகர் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். தமிழக அரசு வகுத்து தரும் பட்டியல் அடிப்படையில் மத்திய குழவினர் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment