Tuesday, January 05, 2016
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 23–ந் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முத்தம்மாள் காலனி, தனசேகரன்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்தது.
ஆயிரக்கணக்கான வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தன. நெல்லை மாவட்டத்ல் பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் கடந்த மாதம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேத ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். தற்போது மத்திய குழு மீண்டும் தமிழகம் வந்துள்ளது. இன்று அக்குழுவினர் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
பின்னர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு வர உள்ளனர். மத்திய அரசின் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
அவர்கள் முதலில் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். பின்னர் நகர் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுகின்றனர். தமிழக அரசு வகுத்து தரும் பட்டியல் அடிப்படையில் மத்திய குழவினர் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment