Tuesday, January 05, 2016

On Tuesday, January 05, 2016 by Tamilnewstv in    
திருச்சியில் விவசாய கடன்களை  தள்ளுபடி  செய்யக்கோரி  நடைபெற  இருந்த  உண்ணாவிரத  போராட்டத்திற்கு  போலீசார்  அனுமதி  மறுப்பு

திருச்சி.அனைத்து விவசாய சங்கம் சார்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் மீதான  விவசாய கடன்களை  தள்ளுபடி  செய்யக்கோரி    உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக கடந்த 3 ம் தேதி அறிவித்தனர்.  இந்நிலையில்  உண்ணாவிரத போராட்டத்திற்கான அனுமதி பெற திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் இதற்க்கு மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர்   அனுமதி  மறுத்ததாக  தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் விவசாயிகளின் நாயமான கோரிக்கைகளுக்கு கூட போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பது வேதனையளிப்பதாகவும் எனவே காவல் துறை பரிசீலனை இது எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.




0 comments: