Saturday, September 03, 2016
On Saturday, September 03, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.9.16
திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் மற்றம் அவருடைய ஆதரவாளர்களை அஇஅதிமுகவினர் நாற்காலி வீசி தாக்கினர்.
திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் லால்குடி திமுகசட்டமன்ற உறுப்பினர் ;வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் மாவட்டஆட்சித்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனக்கு பேச வாய்ப்பு அளிக்க கேட்டபொழுது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நன்றியுரை கூறச்சொல்லியுள்ளார் அதற்கு தனக்கு பேச வாய்ப்பு வேண்டும் என்று லால்குடி சட்டமன்ற உறுப்பினர் கேட்ட பொழுது மக்கள் தொடர்பு அதிகாரி தேசிய கீதம் பாடத்தொடங்கிவிட்டது என்று சொல்லி பேச வாய்ப்பு இல்லை என்று மறுத்துள்ளார் அதற்கு லால்;குடி சட்டமன்ற உறுப்பினர் ஏன் இப்படி செய்கிறீர்கள் இது நியாயமா என்று பேச அஇஅதிமுக தொண்டர்கள் நாற்காலிகளை வீசி லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் அவருடை ஆதரவாளர்களை தாக்கினர்
அப்பொழுது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் பேசியபோது குமுலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் இல்லை மக்கள் தண்ணீருக்கு அவதிபடுகிறார்கள் லால்குடி மேம்பாலம் பணி முடிவடையவில்லை ரயில்வே கேட்டை நிறந்தரமாக மூடிவிட்டனர் திருச்சி மாவட்டம் இலால்குடியில் இலால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் 143 ஆண்டு முன்பு கட்டப்பட்டது இந்த கட்டிடத்தில் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முதன்மை உரிமையியல் நீதிமன்றம் பொதுப்பணித்துறை அலுவளகம் குற்றவியல் நீதிமன்றம் கிளைச்சிறைச்சாலை பத்திரபதிவு அலுவலகம் போன்ற பத்துக்கு மேற்பட்டஅலுவலகங்கள் இந்த கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிஅலியாஸ்சங்கரன் 4.11.15 கட்டிடம் பழைமை அடைந்து விட்டது அதனை மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் பரிந்துறை செய்துள்ளார் அதற்கு முன்னாள் அமைச்சர் நேருவும் தன்னுடை சொந்த இடத்தை அரசுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார் ஆனால் அரசும் அமைச்சர்களும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை இதனை நான் விழா மேடையில் பேசினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதற்காக என்னை பேசவிடவில்லை மக்கள் பணியாற்ற என்னை விடவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பேட்டி லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...