Tuesday, September 06, 2016
தமிழகத்திற்கு தினமும் 15,000 கன அடி வீதம் காவிரி நீரை 10 நாட்களுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதை காவிரி கண்காணிப்புக் குழு மேற்பார்வையிடவும், இதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களுக்குள் அணுகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களுக்குள் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த விசாரணையை முன்னிட்டு கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டுப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment