Friday, September 21, 2018

On Friday, September 21, 2018 by Tamilnewstv in ,    



நேரு நினைவு கல்லூரி வணிக மேலாண்மையியல் சார்பில் "நீரின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு முகாம்"  வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்கள் நீரின் மகத்துவம் மற்றும் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நாடகம் மூலமாக விளக்கி கூறினர். மாணவர்கள் பிரேம் குமார் மற்றும் பிரகாஷ் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவரித்தனர். மாணவர் கிருபா பிரகனேந்திரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளக்கல்பட்டி பஞ்சாயத்தின் செயலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments: