Thursday, February 06, 2020

On Thursday, February 06, 2020 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் காயத்ரிதேவி தலைமை வகித்தார். செயல் தலைவர் கோமதி சிறப்புரையாற்றினார்.
கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை, இடமாறுதல் உத்தரவு, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. பெண்கள் பிரசவத்திற்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் தான் பெண்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும். இதற்காக கிராம சுகாதார செவிலியர்களை அழைக்கக் கூடாது. தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி விபரம் குறித்த தகவலை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், இமெயிலில் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
 துணை சுகாதார நிலைய மேம்பாட்டு நிதி, நிபந்தனையற்ற நிதி, கிராமக் குடிநீர் மற்றும் துப்புரவு குழு நிதிகளை மூன்று ஆண்டுகளாக முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். வாடகையில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வாடகை பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

0 comments: