Thursday, March 12, 2020
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோ மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே பலவிதமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஆயிரம் வெளி நோயாளிகளும் 3,000 உள் நோயாளிகளும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இருவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு கர்ப்பப்பை நாளங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உயிர் இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது கேத்லேப் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமலும், கர்ப்பப்பையை அகற்றாமலேயே சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகிறது. பிறப்பிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கேத்லேபில் உள்ள ஒரு கருவி மூலம் துவாரத்தை அடைக்கும் சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 பயணிகள் காய்ச்சலுடன் இங்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. அவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற்று வீட்டிற்குச் சென்று விட்டன என்றார்.
உடன் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment