Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்

 ( இப்படி ஒரு பெயர் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

பல்வேறு வகையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வருபவர்கள் எல்பின் மற்றும் அறம் மக்கள் நல சங்க இயக்குனர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா, எஸ்ஆர்கே ( எ ) ரமேஷ்குமார்.
எல்பின் நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மகாபலிபுரம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறையினரை மீறி கூட்டம் நடத்த உள்ளனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறை நுழைய அனுமதி இல்லை என்பதால் மகாபலிபுரத்தில் தேர்ந்தெடுத்து அங்கு கூட்டம் நடத்த உள்ளனர்.
இதனிடையே மதுரையில் காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையாக எல் பின் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தஞ்சை போலீசாரை சமாளித்து அங்கு கைதானவர்களை வெளியில் எடுத்தது போல் மதுரை போலீசாரையும் ( 💵💵💵 )சமாளித்து மீண்டும் மக்களுக்கு நாம் நன்மை செய்வோம் என அவர்கள் உறுப்பினர்களிடையே தகவல் பரப்பி வருவதாக ஓர் தகவல்.
அதேபோல் இன்று ஓர் பத்திரிக்கை சங்கத்தை அழைத்து தங்கள் எல்பின் நிறுவனத்துக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு அனைத்தையும் செய்கிறேன் நாங்கள் தயாராக உள்ளோம் என எஸ்ஆர்கே (எ) ரமேஷ்குமார் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அடைந்தே தீருவார்கள் என்பது ஆண்டவன் முடிவு. மதுரை போலீசாரை பணத்தால் சமாளிப்பார்களா    வேறு வழியில் அமைதிப் படுத்துவார்களா ? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

0 comments: