Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 67 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்
இதில் 64 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி 
வைக்கப்பட்டுள்ளனர். 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து 
திருச்சிராப்பள்ளிக்கு திரும்பிய 1 நபருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி 
செய்யப்பட்டுள்ளது. 
 தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை சார்ந்த 4 நபர்களும் பெரம்பலூர் 
மாவட்டத்தை சார்ந்த 14 நபர்கள் அரியலூர் மாவட்டததை சார்ந்த 2 நபர்கள் ஆக 
கூடுதல் 20 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து நபர்களும் நலமுடன்
உள்ளனர்

 வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்;கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல் 
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக 
மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்

0 comments: