Sunday, October 05, 2014

On Sunday, October 05, 2014 by Unknown in ,    
கரூர் :கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஜெயந்தி ஆய்வுசெய்தனர்.கலெக்டர் ஜெயந்தி, கூறியதாவது:
முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் அனைத்து டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் இரண்டு நகராட்சி மற்றும், 11 டவுன் பஞ்சாயத்துகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகள் முழு சுகாதாரமாக இருப்பதே, இதன் நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்துவதை, பொதுமக்களிடையே கட்டாயப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினசரி நகர்ப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மூலம் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்குதலின்றி சுகாதார முறையில் வாழ முடியும். பொதுமக்கள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ராஜேந்திரன், கரூர் தாசில்தார் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Sunday, October 05, 2014 by Unknown in ,    
கரூர்: எப்போது பார்த்தாலும் குடிப்பது, சண்டை போடுவது என்று இருந்த கணவரால் மிகுந்த, மன வேதனை அடைந்த 48 வயது பெண் தனது 50 வயது கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். குளித்தலை அருகே உள்ளது மாடு விழுந்தான் பாறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நடராஜன் (50) இவருடைய மனைவி மீனா (48) இவர்களுக்கு, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் ராம்குமார் லாரி டிரைவராக இருக்கிறார். திருச்சியில் உள்ளார். நடராஜன் குடிக்கு அடிமையாகி விட்டார். எப்போது பார்த்தாலும் குடிப்பது, மனைவியைப் போட்டு அடிப்பது என்று இருந்து வந்தார். அவரைத் திருத்த முயன்று மீனாவுக்கு தோல்வியே கிடைத்தது. நேற்று முன்தினம் இரவுவும் போதையில் வந்த நடராஜன், மீனாவிடம், தகராறு செய்து விட்டு தூங்கி விட்டார். கணவரின் செயலால் கொதிப்படைந்த மீனா, இனியும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை, கத்தியால், கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பிறகு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, நடராஜன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார், நடராஜனின் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதுடன், மீனாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் குடி போதையில் நடராஜனே கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டதாக முதலில் கூறினார் மீனா. ஆனால் போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மீனாவைப் போலீஸார் கைது செய்தனர்.
On Sunday, October 05, 2014 by Anonymous in    


Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர், அக்.4-
திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மன்றம் சார்பில் சட்டம் ஓர் அறிமுகம் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் சனியன்று இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர் வை.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்ட உதவி மன்றத் துணைத் தலைவர் பி.ஜெயலட்சுமி வரவேற்றார். சட்ட உதவி மன்றச் செயலாளர் எஸ்.விஜயா இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். "சட்டம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் விளக்கிப் பேசினார். இதில், பெண்களுக்கான சட்டங்கள், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், நடைமுறையில் அமலாக்குவது, நீதித்துறை, காவல் துறையுடன் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை தொடர்பாக விரிவாக அவர் எடுத்துக் கூறினார்.
இதில் சட்ட உதவி மன்ற துணைச் செயலாளர் ஈ.அங்குலட்சுமி, மாதர் சங்கத் துணைச் செயலாளர் என்.சசிகலா உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி நிறைவுரை ஆற்றினார். முடிவில் துணைச் செயலாளர் ஏ.ஷகிலா நன்றி கூறினார்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர், அக்.4-
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக மர்ம மனிதர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
நடேசன்நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைஸ்கூல் மேடு பயணிகள் நிழற்குடை அருகில், சுமார் 15 அடி உயர இரும்பு குழாயில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கொடிக்கம்பத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் முழுமையாக அகற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக நடேசன் நகர் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் கே.வடிவேல் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
On Saturday, October 04, 2014 by Unknown in ,    


குருச்சிக்கோட்டையில்  அ .இ .அ .தி .மு .கவினர் .உண்ணாவிரதப்போராட்டம் 

  உடுமலை . அ .இ .அ .தி .மு .க.பொது செயலாளர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து  கவுன்சிலர் வாசு தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம்  நடைபெற்றது .போராட்டத்தில் 2000-க்கும் மேல்  கலந்து கொண்டனர் .மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் .வாசுதேவ் ராம்குமார் ரவிச்சந்திரன்  உள்ளிட்ட  ஏராளமான  கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கொட்டும் மழையுளும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .முடிவில் அமராவதி பாசனசங்கத்தலைவர்  எஸ் .ராஜ்குமார் பழரசம் கொடுத்து  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உடன்  வழக்கறிஞர் ராமகிருஸ்ணன்  கவுன்சிலர் வாசு  மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் 

On Saturday, October 04, 2014 by Unknown in ,    


முன்னிலை அழகர்சாமி ஊராட்சி கழக செயலாளர் மடத்துக்குளம்  பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி  ஒன்றிய குழுத்தலைவர் திருமலைசாமி  ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி  கிட்டுசாமி ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில் [எ ]பொன்னுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் 1500 க்கும் மேல் கலந்து கொண்டனர் . முடிவில் நன்றி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம்  நன்றி கூறினார் உடன் மடத்துக்குளம் கவுன்சிலர் எ .குணசேகரன் கெ .எஸ் .பாலு மற்றும்  திரளான கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர் .
On Saturday, October 04, 2014 by farook press in ,    


திருப்பூர்,அக்.4-
மடத்துகுளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ.தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் நடைபயணம் சென்று ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர்.
திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில்அண்ணா தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு  இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில்  ஜெயலலிதா விடுதலை பெற வேண்டிகொழுமம்  அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், நடைபயணமாக கொமரலிங்கம், மி.நீலம்பூர், மடத்துக்குளம்,கழுகரை, சோழமாதேவி, கணியூர் வழியாக காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், நீலம்பூர் முனியப்ப சுவாமி கோவில், செங்குளம்தர்கா ஆகிய இடங்களில்
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியச்செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, கொமரலிங்கம்பேரூராட்சி துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத்தலைவர் ஜி.கே.தண்டபாணி, மடத்துக்குளம் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் இயேசுதுரை, குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் சிவலிங்கம், கணியூர் பேரூராட்சித்தலைவர் தேவி, துணைத்தலைவர் கணியூர் காஜா மைதீன், கணியூர் ராஜ், காரத்தொழுவு ரவி, சோழமாதேவி இப்ராகிம், சந்திரசேகர்,கொழுமம் தலைவர் இந்திராணி, கொழுமம் ராகவன், அண்ணா தொழிற்சங்கம் சி.டி.சி. மகாலிங்கம், ரத்தினசாமி, பழனிச்சாமி, சி.டி.சி. தங்கவேலு, தம்பிதுரை, பாபு, பாலு, முருகன், கருப்புசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிவாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    


திருப்பூர்,அக்.4-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா  வழக்குகளில் இருந்து  மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலுவபட்டி எம்.பாலு,ஹரிஹரசுதன், பட்டுலிங்கம் .ரத்தினகுமார், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், கே.பி.சண்முகம், சிவா, நீதிராஜன் ஆகியோர்களும்,
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ரூபன், சத்தியநாராயணன், சதீஷ்,முருகேஷ்,வேலுசாமி, பரிமளா, தங்கவேல்,மணிகண்டன்,யோகேஷ், ஷிலாதேவி, சித்ரா, கண்ணன்,சையத் இப்ராகிம், திவ்யா, ஜோதிமணி,நடராஜ், உதயகுமார், ராமமூர்த்தி,பூபதி, தங்கமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.