Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by Unknown in    
On Wednesday, October 08, 2014 by Unknown in    


«.þ.«.¾¢.Ó.¸.¦À¡Ðî ¦ºÂÇ¡Ä÷ ¦ºøÅ¢ ¦ƒÂÄÄ¢¾¡ ¨¸Ð¦ºöÂôÀ𼨾 ¸ñÊòРŢξ¨Ä ¦ºöÂ째¡¡¢ §À¡ÊÀðÊ ÓÕ¸ý ´ýȢ «õÁ¡ §ÀèŠШ½ ¦ºÂÄ¡Ç÷ ¾¨Ä¨Á¢ø ¯ñ½¡Å¢Ã¾ô §À¡Ã¡ð¼õ


P.¬ÚÓ¸õ :¯ÎÁ¨Ä ´ýȢ M.G.R.ÁýÈ Ð¨½ ¦ºÂÄ¡Ç÷,         þÂìÌÉ÷ ¯ÎÁ¨Ä ¾¡Ö¸¡ Å£ðΠź¾¢ ÜðÎÈ× ºí¸õ
T.¿¡¸ÓòÐ           :M.G.R. þ¨Ç»Ã½¢ ¦ºÂÄ¡Ç÷, V.¦ºøÅሠ¸¢¨Ç ¦À¡ÕÇ¡Ç÷, P.¬ÚÁ¢ «õÁ¡§À芦ºÂÄ¡Ç÷, T.¿¡¸Ã¡ˆ «õÁ¡ §À芾¨ÄÅ÷, N.¦ºøÄÓòÐ, N.¿¡¸ÓòÐ, K.À¡ÄÍôÀ¢ÃÁ½¢Âõ, R.Á¡ÂÅý, þ¨Ç»÷, þÇõ ¦Àñ¸û À¡º¨È ¦ºÂÄ¡Ç÷, A.ÃÒ¾£ý ¯ÎÁ¨Ä ´ýȢ «õÁ¡ §À芦À¡ÕÇ¡Ç÷.  ÅçÅüÒ¨Ã:-     ¸.Á¢øîº¡Á¢, ÓýÉ¡û °Ã¡ðº¢ ÁýÈ ò¨ÄÅ÷ Á¡Åð¼ Ţź¡Â «½¢ Ш½î ¦ºÂÄ¡Ç÷, R.§ÅÖÁ½¢ «õÁ¡ §À芦ºÂÄ¡Ç÷ °Ã¡ðº¢ ÁýÈ ¯ÚôÀ¢É÷ V.Ã¡Ó Ex ¸¢¨Ç ¦À¡ÕÇ¡Ç÷,¾¢Õ.¦ºøÅÌÁ¡÷,T.Á½¢, Ex ¸¢¨Ç ¦À¡ÕÇ¡Ç÷ T.¬ÚÓ¸õ,Ex ¸¢¨Ç À¢Ã¾¢¿¢¾¢ V.S.¬Éó¾ý, K.¿¼Ã¡ˆ, M.Å¢ƒÂÄðÍÁ¢ Ex °Ã¡ðº¢ ÁýÈ ¯ÚôÀ¢É÷ T.ÓÕ¸ý «õÁ¡ §À芦ºÂÄ¡Ç÷, ¿£Ä§Å½¢, ¸üÀ¸õ, ¸Ä¡Á½¢, ¾ÉÄðÍÁ¢, ¦ƒÂÄÄ¢¾¡. º¢ÈôÒ¨Ã:-  ¾¨Ä¨Á ¸Æ¸õ §ÀÇ÷ Å¡ÇÅ¡Ê ºñÓ¸õ, ¾¢Õ.À¡ø ¿¡Ã¡Â½ý ¾Á¢Æ¸ Áì¸û Óý§ÉüÈ ¸Æ¸õ Á¡Åð¼ ¦ºÂÄ¡Ç÷. ¾¢Õ.K.¸ñ½ý «õÁ¡ §À芯ÎÁ¨Ä ¿¸Ã ¾¨Ä¿¸Ã ÜðÎÈ× Å£ðΠź¾¢ ºí¸ò ¾¨ÄÅ÷, ¾¢Õ. Å¡÷¼ý ¦À¡ýÛÁ¢ ¯ÎÁ¨Ä ºð¼ ÁýÈ ¦¾¡Ì¾¢ ¦ºÂÄ¡Ç÷.¾¢Õ.ÐÀ¡ö ¬ÚÓ¸õ ¯ÎÁ¨Ä «ñ½¡ ¸Éø µðÎÉ÷ ºí¸ ¦ºÂÄ¡Ç÷.¾¢Õ.ÓÕ¸¡Éó¾õ M.G.R.ÁýÈ þ¨Ç»Ã½¢ ¦ºÂÄ¡Ç÷, ÅÆì¸È¢»÷, PA.Á¢øŠ Шú¡Á¢. ¾¢Õ.Å¢ŠÅ¿¡¾ý, PA.Á¢øŠ ¿¸Ã¸Æ¸ ¦À¡ÕÇ¡Ç÷, ¾¢Õ.º¢ýÉÁ¢ ,Å¡÷Î ¿¸Ã ¾¨ÄÅ÷. 2000-ìÌõ  §ÁüÀ𧼡÷ ¯ñ½¡Å¢Ã¾ò¾¢ø Àí§¸üÈÉ÷.




On Wednesday, October 08, 2014 by farook press in ,    

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் அருகே மீன்கடைகளுக்கு பின்புறம் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் சமைக்கப்படும் உணவின் சுவை குறித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. எனவே இந்த உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் அம்மா உணவகம் அருகே மீன் மார்க்கெட் இருப்பதாலும், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் அம்மா உணவகம் அருகே கொட்டப்படுவதாலும் அங்கு துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகினசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனு£ர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர் வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் கிடைத்து வந்தது. இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டுபோனது. மேலும் வனப்பகுதி முற்றிலும் காய்ந்துபோனது. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது.இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வன ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோட்டோரம் ஓடும் வன ஓடைகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து கும்மாளம் அடிக்கின்றன. பின்னர் வனஓடைகளில் உள்ள தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு செல்கின்றன.
On Wednesday, October 08, 2014 by Unknown in ,    


On Wednesday, October 08, 2014 by farook press in ,    
கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாணை பிடிக்கும் கல் விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். அவருடைய மகன் ஆதிசங்கர் (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திரங்கள் பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் கார் உதிரிபாகங்களை கல்லில் சாணை பிடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கல் உடைந்து ஆதிசங்கர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆதிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இறந்த ஆதிசங்கரின் உறவினர்கள் 100-க் கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரவுண்டானாவில் ஒன்று கூடினார்கள். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிசங்கரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த ஆதிசங்கரின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்றியதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பி. நகர். இங்கு ராசாம்பாளையம் ரோட்டில் ஒரு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த பகுதியையொட்டி ஸ்டாலின் வீதி என்ற குடியிருப்பு பகுதி இருக்கிறது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி நிலத்தில் முள்செடிகள் வளர்ந்து காடுபோல் கிடக்கிறது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குமிழ்விட்டு ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. பொங்கி வழியும் தண்ணீர் அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாலும் காலி இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் பெருகிக்கொண்டே இருந்தது.இதுபற்றி அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்து பார்த்தனர். ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குமிழ் குமிழாக நீரூற்று தோன்றி இருந்தது.இடி விழுந்ததால் தான் இப்படி நீரூற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆக்கியில் இடம் பெற்ற வீரரை முதல்–மந்திரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த ஆக்கி அணியின் கோல் கீப்பராக கொச்சி பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (29) பணியாற்றினார்.
இதையடுத்து கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டி, ஸ்ரீஜேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பென்னிபெகன் எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இது குறித்து முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜேஷின் பங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது. அவரை கேரள மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். இவரை போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேரள அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கேரள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவர், கேரள மாநில ஆக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.