Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலையாக வேண்டி, ஊத்துக்குளி கயித்தமலையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு மற்றும் யாகம் செய்தனர். இதில் ஒன்றிய கழக செயலாளர் சி.டி.ரவிசந்திரன், பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கசாமி, நகர செயலாளர் சின்னசாமி மற்றும் அய்யாசாமி, கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
நெகமம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து, அதில் இருந்து கியாஸ் கசிந்த தால் பரபரப்பு ஏற்பட் டது.
திருப்பூர் மாவட்டம் பொங் கலூரில் இருந்து நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் கம்பெனிக்கு கியாஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. லாரியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் 18 டன் கொள்ளளவு கொண்ட கியாஸ் இருந்தது.
மெட்டுவாவி-காவிலி பாளையம் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தது. அப் போது ஒரு வளைவில் திரும் பும் போது, எதிர்பாரத வித மாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதையடுத்து லாரியில் இருந்து கியாஸ் கசிந்து கொண் டிருந் தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நெகமம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அருகில் இருந்தவர் களை போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். கியாஸ் கசிந்து கொண்டிருந்த தால் தீயணைப்பு படை வீரர்கள் அசம்பாவித சம்பவங் கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர்.
அந்த வழியாக செல்லும் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மாற்றுப்பாதை குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் உள்ள ஆடு, மாடுகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப் பட்டது. கியாஸ் கசிந்து கொண்டிருந்ததால், லாரி அருகே யாரும் செல்ல போலீ சார் அனுமதிக்க வில்லை.அதை தொடர்ந்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, அதில் கியாஸ் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பொக்லின் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
திருப்பூரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி இறந்த சிறுமிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கூட்டத்தினர் ராயபுரம் ரோட்டில் ஊர்வலம் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் வளையங்காடு வாசுகி நகரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான வடமாநிலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி கடந்த 3–ந்தேதி இறந்தாள். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து இறந்த சிறுமிக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் சேவா கமிட்டி தலைவர் சம்பத்குமார், நிர்வாகி கிஷோர்ஜெயின், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் காடேஷ்வரா சுப்பிரமணியம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர்குமார், தாமு மற்றும் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இவர்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், சிறுமியின் இறப்புக்கு காரணமான குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். இறந்த சிறுமியின் படத்துக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் சேவா கமிட்டி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கோஷங்களை எழுப்பியபடி ராயபுரம் ரோட்டில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஊர்வலம் செல்ல ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் போலீசார் அவர்களை பள்ளி வளாக வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் சிவகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சென்னகேசவன், ராஜசேகரன் மற்றும் போலீசார், கூட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருப்பூர் சேவ சங்க கமிட்டி தலைவர் சம்பத்குமார் கூறும்போது, சிறுமி இறப்புக்கு காரணமான குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்படக்கூடாது. தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. நீதி கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை போலீசாரும், அரசும் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து.

On Wednesday, October 08, 2014 by Unknown   
On Wednesday, October 08, 2014 by Unknown in    
On Wednesday, October 08, 2014 by farook press in ,    


திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர்  நிகழ்ச்சியில் ஒன்றியி  செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம்,  நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.