Friday, March 13, 2020

On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 13

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பன் மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து திருச்சியில் கண்டன போராட்டம்

இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. என்.சி.ஆர், என்.பி.ஆ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைக்கு காரணமென பொய்யாக தொடர்புபடுத்தி கைது  செய்து வருகின்றனர். சங்பரிவார் மற்றும் டெல்லி காவல்துறை இருவரும் இதற்கு பொறுப்பாவர்கள்.


ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான ஈடுபட்டிருந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர் டானிஷ் கைது செய்யப்பட்டார். மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அவதூறு செய்வதற்கான தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த போக்கை கண்டித்து
மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகில்  மாவட்டச் செயலாளர்,
முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ,
கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் SDPI மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் 200க்கு மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

பேட்டி :
முஜிபுர் ரஹ்மான்
மாவட்ட தலைவர் .
பாபுலர் பரண்ட்ஸ் ஆஃப் இந்தியா


On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கை


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடமாற்றம் ஆக அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு ஊருக்கு மாற்றப் பட்டுள்ளார் .

 அதற்கு மாறாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் மணச்சநல்லூர் ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 துறையூர் ஆய்வாளர் குருநாதன் லால்குடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா துறையூர் காவல்துறை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாசுகி வடக்கு மண்டலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் லட்சுமி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்
On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
திருச்சி முதலமைச்சராக பதவியேற்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை கட்டாயமாக இன்று அறிவித்து விடுவார் என்ற ஆவலில் திருச்சி ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர், சிந்தாமணி அண்ணாசிலை அருகேயும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயும் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையடுத்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஜினி பேசிய பேச்சு, அறிவிப்புகளைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளை வெடிக்காமல் திருப்பி எடுத்துச் சென்றனர். அதேபோல் இனிப்புகளையும் வழங்காமல் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எங்களது தலைவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். இதற்காக காலை 5 மணி முதல் காத்திருந்தோம். அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து விட்டார். ஆனால், முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.


தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். இரண்டு ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். அந்த துணிச்சல் இருப்பதால்தான், நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம். அவர்களை எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தேர்தல் நேரத்தில் எங்களது பணியை அவர் பார்ப்பார். அவர் வந்தால் நன்றாக இருக்கும். வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.

ரஜினி வந்தால் ஓட்டு போடுவோம் என்று பெண்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ரஜினி கைகாட்டும் ஆளுக்கு ஓட்டுப்போட நாங்கள் தயாராக இல்லை என்று கூறுகின்றனர். அவர் கூறிய வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியுமே தவிர, வேறு யாராலும் நிரப்ப முடியாது. மன்ற நிர்வாகிகளுக்கு பதவி இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவர் முதலமைச்சராக ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி' என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பொதுமக்களை விட அவரது ரசிகர்கள் இதை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அவரது இன்றைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
On Friday, March 13, 2020 by Tamilnewstv in    
மாண்புமிகு உயர் நீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் எதிர்தரப்பினர் கட்சி பிரமுகர்கள் மதிக்கவில்லை ஊர் மக்கள் கதறல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய 7 கிராமங்களுக்கு சொந்தமானதாகும். இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக்  கோவிலில் மாசி மாதம் தோறும் திருவிழா நடைபெறும்.

அப்போது அம்மன் வீதி உலா வந்து கிடா வெட்டு நடைபெறும். இந்த வகையில் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு மாசி திருவிழா நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக  வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில்  அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள்  அம்மன் கொண்டு செல்லாமல் ஒரு பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது. ஆனால் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த அந்த சமூக மக்கள் மறுப்பு தெரிவித்தனர். தங்களது பகுதிகளிலும் அம்மன் வீதிஉலா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே அம்மன் வீதிஉலா உலா நடைபெற்றது. ஆனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதிஉலா நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதை கண்டித்து லால்குடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. எனினும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களை சமாதானப்படுத்தினர்.

Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று அறிவித்ததை தொடர்ந்து

இஸ்லாமியர்கள் திருச்சி பால்பண்ணை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கின்றன


பழைய பால்பண்ணை முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு செய்கின்றனர் அங்கு பதற்றம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இரவு 11 அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடியற்காலை 3 மணி வரை நீடித்தது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சுமூக பேச்சுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர்
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின்

 ( இப்படி ஒரு பெயர் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

பல்வேறு வகையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வருபவர்கள் எல்பின் மற்றும் அறம் மக்கள் நல சங்க இயக்குனர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா, எஸ்ஆர்கே ( எ ) ரமேஷ்குமார்.
எல்பின் நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தில் எங்கும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மகாபலிபுரம் ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறையினரை மீறி கூட்டம் நடத்த உள்ளனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் காவல்துறை நுழைய அனுமதி இல்லை என்பதால் மகாபலிபுரத்தில் தேர்ந்தெடுத்து அங்கு கூட்டம் நடத்த உள்ளனர்.
இதனிடையே மதுரையில் காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கையாக எல் பின் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர். தஞ்சை போலீசாரை சமாளித்து அங்கு கைதானவர்களை வெளியில் எடுத்தது போல் மதுரை போலீசாரையும் ( 💵💵💵 )சமாளித்து மீண்டும் மக்களுக்கு நாம் நன்மை செய்வோம் என அவர்கள் உறுப்பினர்களிடையே தகவல் பரப்பி வருவதாக ஓர் தகவல்.
அதேபோல் இன்று ஓர் பத்திரிக்கை சங்கத்தை அழைத்து தங்கள் எல்பின் நிறுவனத்துக்கு ஆதரவாக நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு அனைத்தையும் செய்கிறேன் நாங்கள் தயாராக உள்ளோம் என எஸ்ஆர்கே (எ) ரமேஷ்குமார் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அடைந்தே தீருவார்கள் என்பது ஆண்டவன் முடிவு. மதுரை போலீசாரை பணத்தால் சமாளிப்பார்களா    வேறு வழியில் அமைதிப் படுத்துவார்களா ? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோ மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே பலவிதமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு  ஆயிரம் வெளி நோயாளிகளும் 3,000 உள் நோயாளிகளும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி  வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 இருவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு கர்ப்பப்பை நாளங்களில்  ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உயிர் இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.   தற்போது கேத்லேப் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமலும், கர்ப்பப்பையை அகற்றாமலேயே சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகிறது.  பிறப்பிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு  கேத்லேபில் உள்ள ஒரு கருவி மூலம் துவாரத்தை அடைக்கும் சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 பயணிகள் காய்ச்சலுடன் இங்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. அவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற்று வீட்டிற்குச் சென்று விட்டன என்றார்.
 உடன் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.


Wednesday, March 11, 2020

On Wednesday, March 11, 2020 by Tamilnewstv in    
திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூரில் மத மோதலுக்கு திட்டமிட்ட சக்திவேல்ஜீ  உள்ளிட்ட மூன்று பேர் கைது.



திருச்சி மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னனி பொறுப்பாளர் சக்திவேலின் வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம், நேற்றிரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்ட விசயத்தில் திடீர் திருப்பம்.*

*இந்து முன்னனியில் முக்கிய பதவியை பெற தனது வாகனத்திற்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலம்.*
*சக்திவேல் உள்ளிட்ட மூவரை கைது செய்தது திருச்சி காவல்துறை.*

Tuesday, March 10, 2020

On Tuesday, March 10, 2020 by Tamilnewstv in    


திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் . எல்பின் நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும்


தற்போது  sparrowglobal ஏஜன்ஸி என்று நடத்தி வருகிறார்கள் ஆனால் அழைக்கும் போது எல்பின் குடும்பத்தினர் என்று அழைக்கிறார்கள்



இந்த நிறுவனத்தினர்  தற்போது நூதன முறையில் பொதுமக்களை  ஏமாற்றி 3000 கோடி சம்பாதிக்க புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளனர்

இதன் விபரம்:

தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள்  கடைகள் என சுமார் 1,1 70 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளனர். ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக  உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 3000 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 6000 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறது. அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே (  எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 6 ஆயிரம் கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 6 ஆயிரம் கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

( எல்பின் முக்கிய பினாமி  இலுப்பூர் ராஜப்பா தலைமையில் சென்னையில் பணங்களை எப்படி பதுக்குவது என்று ரகசிய கூட்டம் காவல்துறை மற்றும் மத்திய வருமானத் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் காவல்துறை தலைவர்  டிஜிபி அவர்களுக்கு  சவால் விடும் வகையில் அனுமதி வாங்காமல் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்

பின் குறிப்பு :
இதுபோன்று எல்பின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து தினமும் செய்தி வெளியிட்டு வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீது ( சபரிநாதன்) கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது. தற்போது எல்பின் சகோதரர்களிடம் சபரிநாதன் ஆகிய நான் பல லட்சங்கள் இவர்களை நான் ஏமாற்றியதாக புதிய ஒரு கதையை கட்டி வருகின்றனர்

தமிழகத்தை தொடர்ச்சியாக காவல்துறை  நீதித்துறை  மற்றும் பொது மக்களை ஏமாற்றிய இவர்கள் புதிய யுக்தியை துவங்கியுள்ளனர்

இதுபோல் தொடர்ந்து பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டவர்கள் மீது கொலை முயற்சியும், பொய் வழக்கும் பதியும் எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா  மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறம் தொலைக்காட்சி இயக்குனர் ( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.