Sunday, March 29, 2020

On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 29

திருச்சியில் 2,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இதன்படி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 3வது நாளான நேற்று மட்டும் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை மத்திய மண்டலத்தில் மொத்த. ஆயிரத்து 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,115 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, திருச்சி மாவட்டம், முசிறியில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தபட்டவர், விதிமுறைகளை மீறி பிறருடன் கிரிக்கெட் விளையாடி வெளியில் சுற்றி திரிந்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
On Sunday, March 29, 2020 by Tamilnewstv   
திருச்சி மார்ச் 29

கரோனோ பீதியில் தலைமறைவாக விடுதியில் பதுங்கி இருந்த சிங்கப்பூர் ரி்ட்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதி.

தமிழகம் முழுவதும் கரோனோ பீதியில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்பதை உணர்ந்த அந்த அந்த மாநில நிர்வாகம் தன் மாநிலத்திற்குள் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை தேடி கண்டுபிடித்து தனிமைப்படும் பணியில் வேகமாக செயல்படுத்தி வருகிறார்கள்.


சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி வந்திருக்கிறார். ஆனால் வீடு திரும்ப வில்லை. விமானநிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் சக்திகண்ணனை தேடி புதுக்கோட்டை மாவட்ட சுகாதரா ஊழியர்கள் தேடி சென்ற போது வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டது அதிர்ச்சியடைந்தனர்.


சக்திகண்ணன் ஊர் திரும்பியதை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட பெற்றோர் அவரை தேட ஆரம்பித்து கடைசியில் தேடிக்கண்டுபிடித்து கொடுங்கள் என போலீசிடம் புகார் செய்திருக்கிறார்கள். இதனால் சக்திகணேசனை தேடும் படலம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டோன்மென்ட் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அப்போது ஒரு இளைஞன் சிவந்த கண்களுடன் தடுமாறியபடி நடந்து சென்று கொண்டு இருப்பதை பார்த்து தடுத்து விசாரித்த போது.. அவன் நான் மெடிக்கல் வந்தேன், மொபைல சார்ஜ் போடனும் என்று மாற்றி மாற்றி பேச சந்தேகம் அடைந்த போலீஸ் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது.

அவர்  மார்ச் 22ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தாகவும், வீட்டிற்கு சொல்லாமல் திருச்சி ஜங்சன் – மத்திய பேருந்து நிலையம் சாலையில் உள்ள அபூர்வா விடுதியில் 503 எண் அறையில் தங்கி இருப்பதாவும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த தங்கியிருப்பதாக தகவல் சொல்லவும் அதிர்ச்சியடைந்த கண்டோன்மென்ட் போலீஸ் உடனே அவரை பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அவனுடைய பெற்றோருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு இடையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து விடுதிகளும், ஓட்டல்கள் கட்டாயம் மூடி சொல்லி உத்தரவு இருக்கும் நிலையில் திருச்சி அபூர்வா விடுதி எப்படி நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை எப்படி தங்க வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து மாநகர போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.

தற்போது சக்தி கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்..
On Sunday, March 29, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்
1கோடி கொரோனா நிவாரண நிதி  - எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.பி.குமார் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

இந்தியாவிலும்
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது
1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் சார்பிலும் 9,000 கோடி ரூபாய் நிதி தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர்
தன்ஆர்வலர்களுக்கு
நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு
அழைப்பும் விடுத்துள்ளார். இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவும் நிதி கோரி அழைப்பு விடுத்தார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 1கோடியை திமுக எம்.எல்ஏ.க்கள் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,

 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்

ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா
25லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு  வழங்கினர். இது தவிர திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளும் தலா 20 லட்சம் ரூபாய் வீதம்
60லட்சம் ரூபாயையும்,
இதே போல் அதிமுகவின் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான ப.குமார் தனது 3 மாத ஓய்வூதியமான ரூ 1,05000த்தை வழங்கியுள்ளனர்.

Saturday, March 28, 2020

On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் மீது கொரோனா ஆய்வு நடத்த வலியுறுத்தல்


https://tamilnadunewstv.blogspot.com/2020/03/blog-post_52.html 
 24.3.2020   (தொடர்ச்சி)

திருச்சி: துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் அரசு விதிமுறைகளை மீறி அன்னதானம் வழங்கியதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு போலி நிறுவனம் எல்பின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிறந்த முறையில் வணிகம் செய்த 400 பேர் துபாய் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் செயல்படும் அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோரது தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து மார்ச் மூன்றாம் தேதி முதல் துபாய் சென்றனர்.

கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, சென்னை விமான நிலையங்கள் வழியாக இவர்கள் பயணம் செய்தனர்.
 மார்ச் 3ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் துபாயில் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு அதே வழித்தடத்தில் நாடு திரும்பினர்.
 இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் தாக்க தொடங்கியது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் இந்த நோய் இந்தியாவிற்குள் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
 இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு தங்கியிருக்கும் வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி வருகிறது.
 ஆனால் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் துபாய் சுற்றுலா சென்று வந்தவர்கள் கண்காணிக்க படவில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்களும் தாமாக முன்வந்து எவ்வித பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் வீடுகளிலும் தங்கியிருக்க அறிவுறுத்தப் படவில்லை.
மேலும் இந்த அமைப்பினர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

அன்னதானம் நிகழ்ச்சியிலும் கையுறை, முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார் அரசுக்கு சென்றவுடன் அன்னதானம் வழங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பினரும் அன்னதானம் வழங்குவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் வீட்டினுள்ளேயே இருக்காமல் வெளியில் நடமாடியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து இவர்கள் 400 பேரையும் அடையாளம் கண்டு வீட்டிலேயே இருக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.  தொடர்ந்து அவர்கள் மருத்துவர் துறையினரின் கண்காணிப்பில் வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் இத்தனை நாட்கள் பலருடன் பழகி, தெருக்களிலும் நடமாடி உள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கு தாமதமாக புகார் சென்றாலும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் விதியை மீறி நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தவகையில் இந்த 400 பேரது பாஸ்போர்ட்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும்  என்றும் சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்ததற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு துறை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.

 இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு  உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 25 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில் அதற்கென்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் வரிசையாக மக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி காந்தி சந்தை வரும் 30ம் தேதி முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 28

திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண்

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் பேராசிரியரை மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு என்பவர் ஒரு தலை காதல் காரணமாக  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலை 8மணியளவில் ஆண்டார் வீதி பகுதியில் பேரரசிரியர் பணிக்கு சென்ற போது  காரில் கடத்தினார். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அவரை பாதி வழியில் போலீசாரால் மீட்கப்பட்டார். ஆனால் வணக்கம் சோமு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வணக்கம் சோமுவை தேடி வந்தனர். இந்நிலையில் 7மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தார். கொரோனா பீதி காரணமாக சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை தவிர மற்ற விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சரண் அடைந்தால் சிறை செல்ல வேண்டியது இருக்காது என்பதால் வணக்கம் சோமு திடீர் என கோட்டை காவல் நிலையத்தில்  சரண்டைந்ததாக தெரிகிறது.

Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏக்கள் பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதைத்தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 195 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களையும், புகார்களை தெரிவிக்கலாம். 


இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கியது முதல் தற்போது வரை 195 புகார்கள் வந்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. திருச்சி- மதுரை சாலையில் உள்ள கள்ளிக்குடி புதிய காய்கறி வணிக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்த 78 ஆண்கள், 34 பெண்கள் என 112 வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த 22ம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 86 பயணிகள் வந்தனர். இதில் 22 பயணிகளுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது பயணி மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே விமானத்தில் வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4,120 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள்  அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இந்த வகையில் 2,262 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. மீது ஆயிரத்து 498 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி விரைவில் நிறைவு பெறும். இவர்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வந்தால் பாஸ்போர்ட் முடக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 36 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடிய மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.  பொதுமக்கள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அனைவரும் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 அவரோடு பயணம் செய்த நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் அவர்கள் வீடுகளில் வைத்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் பயங்கரம் புரியாமல் மக்கள் இன்னும் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் பலர் வீதிகளில் உலா வருகின்றனர். 

கிராமப்புறங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். கரோனா வைரஸ் தாக்குதலின் விளைவு தற்போது தெரியாது. தொற்று ஏற்பட்டால் தான் அதன் வீரியம் தெரியவரும். மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் காய்கறி வாங்குவோர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் வரலாம். தேவையற்ற காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் வெளியில் வரவேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தை திரும்ப பெற முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகள் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் காந்தி சந்தை பொன்மலை ஜி கார்னரில் செயல்படும். இங்கு பொதுமக்களும் வந்து காய்கறிகளைவாங்கி செல்லலாம். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் செயல்படுமா 6 உழவர் சந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு மாற்றப்படும். இங்கு திறந்தவெளியில் செயல்படும் உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம். திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றப்படும். திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நேந்திரம் வாழை தார்கள் அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அவற்றை அறுவடை  செய்யவும், வாகனங்களில் கேரளாவுக்கு ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27
தன்வந்திரி யாகம் என்றால் கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் நோய்களினால் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் நடத்தும் யாகம் ஆகும் தற்பொழுது கொடிய வைரஸ் காரணத்தால் நோய் ஏற்பட்டு வருகிறது மக்கள் கொடிய நோய்த் தாக்குதல் பாதிப்படையாமல் இருக்கவும் நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடவும் சிறப்பு யாகம் நடைபெற்றது


திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை
தன்வந்திரியாகம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார். இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தன்வந்த்ரி யாகம் பற்றி தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் விளக்கம் அளித்தார்