Thursday, April 30, 2020

On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.  இதனால் திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள அமர் ஜூவல்லரி சார்பில் இன்று ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் 5 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் திருச்சி ஆற்று காவேரி பாலத்தில் தினம்தோறும் ஏழை எளியவர்களுக்கு விடட்டோருக்கும்  மாநகராட்சி நிர்வாகம் மூலமாக இது நாட்களாக சுமார் 
50 பேர்களுக்கு உணவு வழங்கி வந்த இடத்தில்

தற்போது சுமார் 300க்கு மேற்பட்டோர் வருகின்றனர். 

இது குறித்து பேசிய அமைச்சர் வெல்லமண்டி  நடராஜன் அனைவருக்கும் உணவு வழங்கும் வகையில் 

மாவட்ட நிர்வாகம் விடட்டோரை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்கபட்டு வருகிறது, 

மேலும் அம்மா உணவகம் மூலமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது எனவே அதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
வைதீஸ்வரன் கோயில் காக புசுண்டர் நாடி ஜோதிடர் ஜெமினி செல்வராஜ் கொரோனா பற்றி விளக்கம்
             
நாடி ஜோதிடர் கூறுகையில் சென்ற ஆண்டு விகாரி வருடம் மார்கழி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால் உலகத்தில் பலவிதமான தீய சக்திகள் உண்டாகும் போர் நடைபெறும் நிலையில் மதச் சண்டைகள் வலுவடையும் அதை தவிர்த்து இப்படி ஒரு வகையான புதிய வைரஸ் நோய் உண்டாகி வடக்கு வடமேற்கு நாட்டில் நோய் உண்டாகி ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து உள்ளது மேலும் 27. 3 .2020 குரு வக்கிரம் அடைந்த காலத்தில் தொட்டு நோய்த்தொற்று உச்சமாகி உயிரிழப்பு பொருள் இழப்பு பல பெரிய சோதனைகளும் மக்களை மக்களையும் மன்னர்களையும் வாட்டும் அது 8. 7. 2020 பிறகு முழுமையாக 90 சதவீதம் குறைந்துவிடும் மீண்டும் பழைய நிலையை அறிவார்கள் சராசரியான வாழ்க்கை மக்களுக்கு தொடரும்
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
*முசிறி அருகே நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை காரில் அழைத்து சென்று விட்ட சமூகதொண்டு நிறுவனம்* . 
   திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் கடலூர் மாவட்டத்திற்கு நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை சமூகஆர்வலர்கள் காரில் அழைத்து சென்று சொந்தஊரில் விட்டுவந்த சம்பவம் பொதமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
முசிறி அருகே உள்ள தா.பேட்டை வழியாக நாமக்கல் மாவட்டம், தூசூர் என்ற இடத்திலிருந்து 5 கூலித்தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு கிராமத்திற்கு நடந்துசென்றனர். 144 தடை உத்தரவு காரணமாக தொழிpல்பாதிப்படைந்து வறுமையில் வாடியதாலும், பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், தூசூரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவை நடந்துசெல்வதற்கு முடிவு எடுத்து 30 கிலோமீட்டர் நடந்துவந்த நிலையில் தா.பேட்டையை சேர்ந்த வாசவி தொண்டு நிறுவனத்தினருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து தா.பேட்டை போலீசாருடன் இணைந்து வாசவி தொண்டு நிறுவனத்தினர் தொழிலாளர்களுக்கு உணவு ,பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிகொடுத்து கார் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
முசிறி அருகே வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு லாரியில் பழங்கள் கொண்டுவந்து கொடுத்த மனிதநேய செயல்
   திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே நாமக்கல் நகரிலிருந்து வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு தனது டிரைலர் லாரி மூலம் பழங்களை கொண்டுவந்து கொடுத்த லாரி டிரைவரின் மனிதநேய செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
நாமக்கல் நகரை சேர்ந்தவர் லாரிடிரைவர் கண்ணன். இவரதுமகன் பிரதீப் இருவரும் டிரைலர் லாரி சொந்தமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் வசிக்கும் குரங்குகள் உணவுக்கு தவிப்பதை கண்டடிரைவர் கண்ணன் நாமக்கல் நகரில் வாழைபழம், தர்பூசணி, ஆகியவற்றை வாங்கி தனது டிரைலர் லாரி மூலம் கொண்டு வந்து சக்கம்பட்டி, கரட்டாம்பட்டி ஆகிய வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு வழங்கினார். லாரிடிரைவர் போக்குவரத்து தடைபட்டதால் நாமக்கல்லில் நிறுத்தியிருந்த தனது லாரி மூலம் குரங்குகளுக்கு பழங்களை கொண்டுவந்து அளித்தசம்பவம் சமூகஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
* கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திருச்சி மாநகரம்*

திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும்  பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 23 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும்  குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.

இம்மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
*திருச்சி
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா  பேட்டி*



அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில்  தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
 தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.

Tuesday, April 28, 2020

On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை -  3 பேர்  காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர்.

 ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதிமணியின் மகன் சந்திரமோகன் (38) இவர் பிரபல ரவுடி பல கொலை வழக்குகளில், கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது. 

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர் இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது இந்நிலையில் இன்று காலை  ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் 
அண்ணன் தம்பிகள்

சுரேஷ் (35) சரவணன் (30) இவர்கள் இருவரும்  மற்றொருவர் செல்வகுமார் (25)             3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழி மறித்து  
ரவுடி சந்திரமோகன் 
தலையை துண்டித்தனர். 


பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர்.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பறறி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் 
காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள்.

 இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி இப்படி கடிதம் கொடுக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசு உத்தரவின் பெயரில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறதா? உயரதிகாரிகள்  ஏதேனும் சிறப்பு சலுகையின் பெயரில் கடிதம் கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாக உள்ளது?



சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று வந்துள்ளதால் பரபரப்பு,
மாவட்ட ஆட்சியாளர் மட்டுமே வழங்க வேண்டிய Epass யை மணப்பாறை காவல் ஆய்வாளர் எவ்வாறு வழங்கினார் பொதுமக்கள் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் இபாஸ் பெற்று அதன் பின்னரே செல்ல முடியும். அப்படி இபாஸ் பெற வேண்டும் என்றாலும் கூட இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே பெற்றுச் செல்ல முடியும். அந்த இபாசிலும் கூட யார் செல்கின்றனர் அவர்களின் செல்போன் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்.



இது அரசின் கவனத்திற்குள் எப்போதும் இருக்கும். இந்த இபாசை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே பெற முடியும் என்றும் கூட அரசு அறிவித்திருந்தது.





ஆனால் தற்போது மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை பலரும் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் ஒரு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை, தேனி என பல்வேறு  சென்று வருகின்றனர். அப்படி கொடுக்கப்படும் கடிதத்தில் எத்தனை நபர்கள் செல்கின்றனர்? அவர்களின் பெயர் என்ன? அவர்கள் செல்போன் எண் என்ன? என்ற எந்த தகவலும் இல்லை? என்பதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலை கூட காவல் நிலையத்தில் வாங்கி வைப்பதில்லை.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே தான் இந்த இபாஸ் முறை நடைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிட முடியும் என்ற நிலையில் தற்போது மணப்பாறை காவல் நிலையத்தில் காவல்துறையினரே இதுபோன்ற கடிதம் வழங்கும் முறையை நடைமுறைபடுத்தி இருப்பது கொரோனா அச்சத்திற்கான வழிவகையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி யார் செல்கின்றனர் என்ற விபரமும் காவல் நிலையத்தில் இல்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.



ஆகவே இப்படியாக மக்கள் கோரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் வழக்கம் போல் சென்று வரும் நிலையில் மணப்பாறை பகுதிக்கும் கொரோனா தொற்று உருவாகிவிடுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் மக்கள் உறைந்து கிடக்கின்றனர்.



ஆகவே இதுபோன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் அவரின் பெயரால் காவல்துறையினர் அனுமதி கடிதம் கொடுக்கலாமா? 144 தடை உத்தரவு உள்ள நிலையில் எப்படி அந்த கடிதம் கொடுக்க முடியும்? அந்த கடிதம் கொடுப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது? கடிதத்தை பார்த்து மற்ற மாவட்டங்களில் எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதையெல்லாம் விரிவாக விசாரணை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க முயலும் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
  தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைவருக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டு உள்ளது.



  வேலைக்கு செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வாழை வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டு இருந்தோம்.

  வெற்றிலை தற்போது காய்ந்து விட்டது சூறாவளியில் வாழை உடைந்து விழுந்து விட்டது அதேபோல் கரும்பு காய்ந்து விட்டது மாம்பழம் பலாப்பழம் தென்னை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 கரும்பு ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது நெல் பெற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இந்த தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது இதில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் அடுத்து ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும்.

  அதில் திருச்சியிலிருந்து சென்னைக்கு 326 கிலோ மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியுடன் 25 அடிக்கு ஒரு விவசாயி அமர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் இதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும்.

 கொரோனா தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தால் வறட்சியின் காரணமாக துன்பத்தில் 100 பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.