Wednesday, January 13, 2021
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அதிமுகவினர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டத்தில் அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகவும்,மரியாதை குறைவாகவும் கேலி கிண்டல் செய்து பேசியிருந்தார்.இச் செயலை கண்டிக்கும் விதமாக முசிறி கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்,முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கவேல் ரத்தினவேல் மல்லிகா இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது உதயநிதிஸ்டாலின் பேசியதை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூாியன், உய்யகொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் தலைவா் பிரசண்ணா வெங்கடேஷ்,மோகன்தாஸ் , சந்திரசேகா்,சி.பி.எம் ஒன்றிய செயலாளா் வினோத்மணி, விவசாய தொழிலாளா் சங்கம் செல்வராஜ், ம.தி.மு.க .வை.கோ கோவிந்தராஜ்,சமுத்திரம் நடராஜன் ,நாகராஜன்,செல்வமணி,அஜீத்குமாா்,உள்ளிட்ட விவசாயிகள்"பலா் கலந்து கொண்டனா்.
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர்
திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவரது தாலியை மறந்து சென்ற நிலையில் சமயபுரம் போலீஸார் தாலி மற்றும் தங்க செயின் என 23 பவுன் நகையினை மீட்டு பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலஜா. இவர் அங்கு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் குடும்பத்தினருடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு குடும்பத்துடன் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பெங்களூரு சென்றுள்ளார். சேலம் அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது தனது கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க சங்கிலி என 23 பவுன் நகைகளை காணாது திடுக்கிட்டார். இது குறித்து தொலைபேசி மூலம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சமயபுரத்தில் அவர் எங்கெங்கு சென்றார் என்று கேட்டறிந்த போலீசார், அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரின் 20 பவுன் தாலி செயின், மற்றுமொரு 3 பவுன் தங்க சங்கிலியும் அங்கிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர் சமயபுரம் காவல் நிலையத்திற்கு வந்த உடன், கவுன்சிலர் சைலஜாவின் நகைகள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் ,23 பவுன் நகையை பெண் கவுன்சிலரிடம் ஒப்படைத்தனர்.
சமயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையினை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்
திருச்சி தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.
இதற்காக தமிழ்நாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி திருச்சி சென்றடைந்தது. அதன்பின்னர்,கொரோனாதடுப்பூசி திருச்சி சுகாதார மண்டலத்திற்கு உள்பட்ட திருச்சி தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வனிதா, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் ஆறு லட்சம் பேருக்கு வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்துவதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. ஒத்திகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயார் நிலையில் அரசு உள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 100 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்கள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.
தடுப்பு ஊசி ஒரு நபருக்கு இரண்டு (டோஸ்) முறை செலுத்த வேண்டும். முதல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 14 நாள்களுக்குப் பிறகு அடுத்தகொரோனாதடுப்பூசி செலுத்தப்படும். மொத்தம்கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 42 நாள்களுக்குப் பின்னரே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைத்து பரிசோதனைகளையும் முடித்த பின்னரே தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முன்கள பணியாளர்கள் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள முடியும்.
இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. அவசியம் ஏற்பட்டால் மக்களின் அச்சத்தைப் போக்க நான் தடுப்பூசி செலுத்தி கொள்வேன். தடுப்பூசி செலுத்திய பின்னர் 30 நிமிடங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும். இந்திய மருத்துவ கழகத்துடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து பதிவு செசெய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நியாயவிலை கடைகளில் பொங்கலுக்காக வழங்கப்படுகிற இலவச பொருட்களுக்காக ஆளும் அனைத்திந்திய அண்ணா திமுக விளம்பர பதாகைகள் வைத்து கட்சி கொடியை கட்டி வழங்குவதை கண்டித்து நீதிமன்றம் அறிவுறுத்திய படி விளம்பர பதாகைகள் கொடிகளையும் அகற்ற கோரியும்
Tuesday, December 08, 2020
திருச்சி ரயில்வே தொழிலாலர்கள்,விவசாயிகள் போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் - திருச்சியில் SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் பேட்டி
மத்திய மோடி அரசு கொண்டு வந்த
3வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், பஞ்சாப்
மாநிலத்தைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிக டெல்லி முற்றுகையிட்டு கடந்த 12நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று இந்திய அளவிலான பாரத் பந்த்
அறிவிக்கப்பட்டது.
பல்வேறு மாநில கடைகள் அடைக்கப்படும் மறியலகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி எஸ்.ஆர்.எம்.யு ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் SRMU துணை பொதுச் செயலாளர்
வீரசேகரன் தலைமையில் பொன்மலை ஆர்மரிகேட் முன்பு விவசாயிகளுக்டு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும்
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஊட்டி மலை ரயிலை இயக்குவதை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும்,
மேலும் தொழிலாளர்களை பாதுகாத்துவரும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தை கண்டித்தும், 8 மணி நேர வேலையை
12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் ரயில்வே தொழிலாளர்கள் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு ஆதரவகவும் மத்திய, மாநில அரசை கண்டித்து
கோஷமிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன்
சர்வாதிகாரம் போக்கில் செயல்படும் மோடிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்திரா காந்தி காலத்தில் எப்படி இந்தியா ஆட்சியை இழந்தாரோ அதே போல் ரயில்வே தொழிலாளர்கள்,
பாமர மக்கள்
விவசாயிகள்
போராட்டத்தால் மத்திய மோடி அரசு கவிழம் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தையெட்டி ஆர்மரிகேட் முன்பு பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி கரூர் செல்லும் சாலையில் குடமுருட்டி பாலம் அருகில் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்தது அந்த லாரியை மீட்கும் பணியில் அரசு பணியாளர்களும் மின்கம்பத்தில் மோதியதால் மின்வாரிய ஊழியர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்
சமீபத்தில் கரூர் செல்லும் சாலை சீர்அமைக்கப்பட்டு தார் சாலை புதிதாக போடப்பட்டிருந்தது சில நாட்களுக்கு முன் தார்சாலை வேலை நடைபெறும் பொழுது வாகனங்கள் வேகமாக செல்ல முடியாததால் ஒன்றின் பின் ஒன்று சென்றது
அதே போன்று லாரி கவிழ்ந்ததால் லாரி மீட்புப் பணியில் ஈடுபட்டு லாரியை மீட்டனர் அதனால் கரூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
அயிலை சிவசூாியன்,அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தலைமையில் மறியல் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்திற்ககு ஆதரவான பந்த் மற்றும் மறியல் போராட்டம்
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் தொடா் போராட்டத்திற்க்கு ஆதரவாக இன்று நடைபெறும் நாடுதளுவிய பந்த் மற்றும் மறியல் போராட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியம் குழுமணி,கோப்பு மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை பகுதிகளில் 100−சதவித கடையடைப்பு நடைபெற்றது.
சோமரசம் பேட்டையில் எம்.ஜி.ஆா் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பாக நடைபெற்ற சாலைமறியலில் 100− மேற்பட்டோர் பங்கு பெற்றனா் .1−மணி நேரம் சாலை போக்கு வரத்து தடை பட்டது.
Monday, December 07, 2020
திருச்சி
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...








