Tuesday, March 16, 2021
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலில் பதவியேற்றுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக என்னால் உணர முடிகின்றது.எனவே மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்கள் கதிரவனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திருச்சியில் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உட்பட்ட குணசீலம் கோவிலில் தெய்வ தரிசனம் செய்தார். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன் மற்றும் முதன்மை செயலாளர் நேருவின் மகனுமான அருண் நேருவுடன் உடன் திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் மற்ற கட்சிகளில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
Monday, March 15, 2021
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஐயா ஆர் விஸ்வநாதன் அவர்களை,
திருச்சி கிழக்கு சட்டமன் ற தொகுதி வேட்பாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.M. ராஜசேகரன் அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்,
துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீரங்கி சுப்பிரமணியம் அவர்கள்,
லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.விஜய் மூர்த்தி ஆகியோர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குழுமணி பகுதியில் சாருபாலா ஓட்டு வேட்டை
திருச்சி ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக திமுக தலைமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்
Friday, March 12, 2021
ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் MP.பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்துக் பிரம்மாண்டமாக கொண்டாடினர்
திருச்சி ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுக வேட்பாளர் M.P பழனியாண்டி அவரது ஆதரவாளர்கள் சோமரசம்பேட்டை அம்பலகாரர் தெருவில் ஒன்றுகூடி வெடி வெடித்து கொண்டாடினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியின் போது மேக்குடி பெரியசாமி, சோமரசம்பேட்டை சாந்தகுமார், இனியானூர் சாமிதுரை, பள்ளக்காடு கண்ணன், போதாவூர் கவுன்சிலர் சர்வேயர் பழனியாண்டி மற்றும் எம்பி குரூப்ஸை தேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்துள்ள இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர் .
திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர். திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
Friday, March 05, 2021
Monday, February 22, 2021
மண்ணச்சநல்லூரில் 758 பேருக்கு ரூ 2 கோடியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் .
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், 758 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் வழங்கினாா்.
சமூக நலத்துறையின் சாா்பில், தனியார் மண்டபத்தில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆலோசனை படி விழாவில், மண்ணச்சநல்லூர் லால்குடி, புள்ளம்பாடி ஆகிய 3 பகுதியில் உள்ள 758 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவிகளை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் வழங்கினார்.
விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுனிஷா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...










