Thursday, September 09, 2021

On Thursday, September 09, 2021 by Tamilnewstv in    

 இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்


பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது பாருக், தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் குடந்தை ரஹ்மத்துல்லாஹ், ஜமயத்துல் அஹ்லில் குராண் வல்ஹாதிஸ் (JAQH) மாவட்ட தலைவர் எம்.பி.முஹம்மது,  ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் கண்டன உரையில் டெல்லியில் நடைபெற்ற பெண் காவலர் சபியாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் கற்பழிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட்டு மரண தண்டனை விதிக்க வேண்டும் இந்த வழக்கை உரிய முறையில விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை வழியுருத்தினர் 

மேலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பத்திரிகையாளரை சந்தித்தது உண்டா பாஜக ஒன்றிய அரசு பதவியேற்றதில் இருந்து இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது இந்தியவின் சுதந்திர போரட்டத்திற்க்கு முக்கிய பங்கு வகித்தது முஸ்லீம்கள் என்பதை மறந்துவிட்டார்கள் இந்திய தாய்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் பாஜக ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பினால் தான் முடியும்  என கண்ட ஆர்பட்டத்தில் பேசினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின்.பகுதி செயலாளர்.

 ரஃபயுதீன், கமால், நாசர், பாஷா, மகபூப் பாஷா, முகமது ஜாகீர், ராஜாமுகமது, இஸ்லாமிய அழைப்பாளர். ஷாகுல் ஹமீது. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  மாவட்ட செயலாளர் கலீலுர் ரஹ்மான் நன்றி கூறினார்

Wednesday, September 08, 2021

 தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் 


தமிழ்நாடு அரசுத் துறையின் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மொ.சிராஜூதீன், தலைமையில் நடைபெற்றது


1/01/2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியவாறு 1/7/2021 முதல் வழங்குதல் 

2015 நவம்பர் முதல்நாளதுவரை வழங்க வேண்டியபஞ்சப்படி நிலுவையை போக்குவரத்து ஓய்வுதியர்க்கு தாமதமின்றி வழங்க வேண்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்க்கு அமல் படுத்த வேண்டும் மாநில அரசு ஓய்வூதியர் மின்வாரிய ஓய்வூதியர்க்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும் செலவுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதையும் மருத்துவ காப்பீட்டு திட்டதில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தமிழ்செல்வன், சண்முகம், கிருஷ்ணன், பஷீர், டெரன்ஸ், உள்ளிட்டோர் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்

Tuesday, September 07, 2021

 திருச்சி இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அந்தநல்லூர் திருச்சி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அந்தநல்லூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருச்சிராப்பள்ளி மாவட்டம் நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் கோவிட் நோய்த்தடுப்பு மற்றும் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் துரைராஜ் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி தேவி பத்மநாபன் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கூறுகையில் சத்துணவு பெற்று வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் சிப்ஸ்  போன்றவைகள் சத்துணவில் கொடுக்கப்பட்டால் விவசாயிகளின் பிரச்சினை இன்று இரவு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்தது போல் இருக்கும் என்று தெரிவித்த முதல்வரிடம் கூறவேண்டும் தெரிவித்தார்


ஒன்றியக் குழுத் தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் சத்துணவு பெரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் அவசியம் என்று முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பதவி ஏற்ற பிறகு குழந்தைகளுக்கு சத்துணவு வாழைப்பழம் அவசியம் என்று தெரிவித்துள்ளார் என்று கூறினார்


இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் கள விளம்பர உதவியாளர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தேவி பத்மநாபன் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்புகளை அலுவலகம் திருச்சிராப்பள்ளி நோக்க வரை ஆற்றினார் துரைராஜ் ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தலைமை வகித்தார் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முன்னிலை வகித்தார் 


மருத்துவர் சுப்பிரமணி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லியோ பீமாராவ் வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருமதி சகுந்தலா வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி புவனேஸ்வரி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி கோகிலா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அந்தநல்லூர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் சுரேஷ் கண்ணன் ஊராட்சி செயலாளர் முத்தரசன் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நன்றி உரையாற்றினார்

 திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் 
டெல்லியில் காவலர் சபியா கொல்லப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில்
திருச்சி மாவட்ட தலைவர் குலாம்ரசூல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.


 கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு டெல்லியில் பெண் காவலர் சபியா சமூக விரோதிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடல் உறுப்புகளை வெட்டியெறிந்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும் 
சபியா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்.


சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா பற்றி கேட்டதற்கு பேட்டியளித்த
பேச்சாளர் ஜமாத்உஸ்மாயின்  அவர்கள் என்னவென்று தெரியாமலே திகைத்து நின்றார்அருகில் இருந்த மாவட்டத் தலைவர் குலாம் முஹம்மத் கூறுகையில் எத்தனையோ முறைகள் நாங்கள் கேட்டோம் இன்றும் தவ்ஹீத் சுல்தானா அதற்கு முறையாக நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார் தமிழகத்தில் திருச்சியில் சிறுமியை தவ்ஹீத் சுல்தானா கொலை வழக்கு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்தது இன்றும் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது


பேட்டி : 
ஜமாத்உஸ்மாயின்
பேச்சாளர்

 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயிரம்  பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கிடவும் குறைந்தபட்ச ஊதியம்  மற்றும் ஓய்வூதியம் வழங்கி வரும் உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தும் ஏபிசி சுழற்சி முறை பணியிடமாறுதல வரவேண்டும் கொரோனாவால் உயிரிழந்த பணியாளருக்கு நிவாரண நிதி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிடவும் சிறு சிறு தவறுக்காக ஆண்டுக்கணக்கில் மதுபான கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக கடை பணியில் அமர்த்திடவும் பல்வேறு காரணங்களினால் பணியின்றி ஆண்டு கணக்கில் உள்ள பணியாளர்கள் பணி வழங்கிடவும் பல மாவட்டங்களில் மேலாண்மை இயக்குநரின் உத்தரவை மதிக்காமல் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 5 மாவட்ட மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம் ,கோவிந்தராஜன் , மாநில செயலாளர்கள்கல்யாணசுந்தரம் ,முருகானந்தம் கா.இளங்கோவன் ,இரா.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம்மாநிலத் தலைவர்பி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Monday, August 30, 2021

 *காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகா அரசைக் கண்டித்து துவாக்குடியில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்*


திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் இன்று, துவாக்குடியில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், துணை போகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாநில விவசாய அணிச்செயலாளர் புலவர் க.முருகேசன் தலைமையில் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தை விளக்கி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.


இதனைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய மோடி அரசையும் கண்டித்து கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், புஸ்பா சுப்பிரமணியன், வைகோ சுப்பு, ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டம் எம்.தங்கவேலு, திருவெறும்பூர் மு.திருமாவளவன், சி.பீட்டர், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் எம்.ஏ.சரவணன், அந்தநல்லூர் சுரேஸ், மணப்பாறை ப.சுப்ரமணியன், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்மராஜ், தீர்மானக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை பொ.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மிசா சாக்ரடீஸ், எஸ்.பி.சாமிநாதன்,  பொதுக்குழு உறுப்பினர் ஆ.மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பீட்டர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சாத்தனூர் ஆ.முகேஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ந.ரேணுகாதேவி, மவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பாத்திமா, வளர்மதி, நகர மகளிர் அணி அமைப்பாளர் மணிமேகலை, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், முனியசாமி, சரவணக்குமார், துரை.கண்ணன், கார்த்திக், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, August 22, 2021

 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் வருவதை முன்னிட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, சாலை பராமரிப்பு மற்றும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. 


நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதியில் நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் படியும் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும் என என்னுடன் ஆய்வுகளின் போது கலந்துகொண்ட அதிகாரிகளிடம் முறையிட்டும்  வலியுறுத்தி கேட்டு கொண்டும், ஒரு சில பணிகளைத் தவிர பல பணிகள் செய்யாமல் இருப்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் கிழக்கு தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிட தேவையான சுகாதார நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 

 இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர், செயற்பொறியாளர் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி 9 வது வார்டு ஆய்வின் தொடர்ச்சியாக வார் டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும்  சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 


ஒடத்தெரு காவிரி பாலம் பகுதியில் உள்ள இளைஞர்கள் கைப்பந்து திடல் அமைத்து தருமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அந்தோணியார் கோவில் தெருவில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை என்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொண்டார். இந்த ஆய்வுகளின் போது  பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன், வட்ட கழக செயலாளர் திரு. சண்முகம், கழக  நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன், நவம், செபாஸ்டின், கந்தன், சக்திவேல், பரிமாணம், மோகன், தீனதயாளன், குமார், அணி நிர்வாகிகள் மகேஷ்வரன், ஜெய் ஆகாஷ், முத்து தீபக், தினேஷ் மற்றும் கழக தோழர்கள்  பொதுமக்கள் உடன் இருந்தனர்.

 


தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் திருவெறும்பூரில் நடந்த கோவை பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்க முதலாமாண்டு துவக்க விழாவில் கோரிக்கை வைத்தனர்.

விழாவிற்கு மாநில தலைவர் சதுரகிரி அலி தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் சித்திக் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்

 மாநில பெய்ண்டர்களுக்கு,தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும்.என்று கோரிக்கை மனுவை வழங்கினார்கள்  மனுவை பெற்றுக்கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து முதல்வரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி கூறினார்.


மேலும் பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் தான் அரசியல்வாதிகளை அழகாக வரைந்து மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதாகவும் கூறினார்.

இந்த விழாவில் பெயிண்டர் கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.