Wednesday, September 03, 2014
தி்ருப்பூர் 22வது வார்டில் சிபிஎம் வேட்பாளர்
வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்ய உறுதி
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வதென 22வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.
22வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் கே.எஸ்.கே.படிப்பகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. ரங்கநாதபுரம் சி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் 22வது வார்டு வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை அறிவித்து, இந்த தேர்தலின் அரசியல் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து உரையாற்றினர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த வார்டின் மீது ஆளும்கட்சி மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி குப்பை அள்ளுவது, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மக்களை ஏமாற்றி வாக்ககுளை வாங்கலாம் என ஆளும்கட்சியினர் பணபலத்துடன், இறுமாப்புடன் செயல்படுகின்றனர்.
அதேசமயம் இந்த வார்டு கம்யூனிஸ்ட் இயக்கம் பலம்மிக்க பகுதியாகும். அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இந்த வார்டு மக்களுக்கு மிகவும் அறிமுகமான சின்னம். கடந்த பல உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இந்த பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம், கழிவுநீர் வெளியேற்றம், சாலை செப்பனிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேர்தலுக்கு முன்புவரை எதுவும் செய்யாமல் மாநகராட்சி முடங்கிக் கிடந்தபோது, பல்வேறு இயக்கங்களை நடத்தி பணிகளை செய்ய வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. எனவே நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்று வீதிகள்தோறும், வீடு வீடாக மக்களைச் சந்தித்து இதைச் சொன்னாலே நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும். எனவே செப்டம்பர் 18ம் தேதி வரை அனைத்து கட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் ஓய்வின்றி தேர்தல் பணியாற்றி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வோம் என்று இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் 22வது வார்டுக்கு உட்பட்ட கட்சி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...

0 comments:
Post a Comment