Wednesday, September 03, 2014
உடுமலை : கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலையை கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில், இந்து அமைப்புகள் நடத்திய 'பந்த்' போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மனோஜ் மர்மநபர்களால் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், கேரளாவில், 'பந்த்' போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இடுக்கி மாவட்டம் மறையூர், மூணாறு பகுதிக்கு, உடுமலையிலிருந்து பஸ்கள் அனைத்தும் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. இதனால், இரு மாநில தொழிலாளர்களும், பாதிக்கப்பட்டனர். உடுமலை மூணாறு வழித்தடத்திலுள்ள, சின்னாறு, கோவில்கடவு, மறையூர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மறையூரில் நேற்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சின்னாறு செக்போஸ்ட் அருகேயுள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்கள், தமிழக-கேரள எல்லை வரை இயக்கப்பட்ட வாடகை வாகனங்களில் பயணித்தனர்.வாகன போக்குவரத்து இல்லாததால், ஒன்பதாறு மற்றும் சின்னாறு செக்போஸ்ட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment