Wednesday, September 03, 2014
உடுமலை : கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலையை கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில், இந்து அமைப்புகள் நடத்திய 'பந்த்' போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மனோஜ் மர்மநபர்களால் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், கேரளாவில், 'பந்த்' போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இடுக்கி மாவட்டம் மறையூர், மூணாறு பகுதிக்கு, உடுமலையிலிருந்து பஸ்கள் அனைத்தும் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. இதனால், இரு மாநில தொழிலாளர்களும், பாதிக்கப்பட்டனர். உடுமலை மூணாறு வழித்தடத்திலுள்ள, சின்னாறு, கோவில்கடவு, மறையூர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மறையூரில் நேற்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சின்னாறு செக்போஸ்ட் அருகேயுள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்கள், தமிழக-கேரள எல்லை வரை இயக்கப்பட்ட வாடகை வாகனங்களில் பயணித்தனர்.வாகன போக்குவரத்து இல்லாததால், ஒன்பதாறு மற்றும் சின்னாறு செக்போஸ்ட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment