Wednesday, September 03, 2014
உடுமலை : கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலையை கண்டித்து, இடுக்கி மாவட்டத்தில், இந்து அமைப்புகள் நடத்திய 'பந்த்' போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மனோஜ் மர்மநபர்களால் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில், கேரளாவில், 'பந்த்' போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இடுக்கி மாவட்டம் மறையூர், மூணாறு பகுதிக்கு, உடுமலையிலிருந்து பஸ்கள் அனைத்தும் நேற்று காலை முதல் இயக்கப்படவில்லை. இதனால், இரு மாநில தொழிலாளர்களும், பாதிக்கப்பட்டனர். உடுமலை மூணாறு வழித்தடத்திலுள்ள, சின்னாறு, கோவில்கடவு, மறையூர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மறையூரில் நேற்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சின்னாறு செக்போஸ்ட் அருகேயுள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்கள், தமிழக-கேரள எல்லை வரை இயக்கப்பட்ட வாடகை வாகனங்களில் பயணித்தனர்.வாகன போக்குவரத்து இல்லாததால், ஒன்பதாறு மற்றும் சின்னாறு செக்போஸ்ட் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...

0 comments:
Post a Comment