Saturday, September 13, 2014
முன்னாள் மத்திய மந்திரியின் மருமகன் கொலையில் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சர்மா நகரைச் சேர்ந்தவர் வக்கீல் காமராஜ்(வயது 50) முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலையின் மருமகன். கடந்த மாதம் 28–ந்தேதி காமராஜ், தனது கட்சிக்காரர் கல்பனா(40) என்பவரின் வீட்டில் மர்மமான முறையில் அடிபட்டு கிடந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு இறந்தார்.
திரு.வி.க.நகர் போலீசார் கல்பனாவை கைது செய்தனர். இந்த வழக்கு கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரக்குமார், கல்பனாவை 2 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசில் கல்பனா அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
நான் திரு.வி.க. நகரில் வாங்கிய இடம் தொடர்பான வழக்குக்காக வக்கீல் காமராசை அணுகினேன். வழக்கு விஷயமாக அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக்கொண்டு செல்வார். நாளடைவில் அவர் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். சம்பவத்தன்று காமராஜ் வீட்டுக்கு வந்தபோதும் பணம் கேட்டு தொல்லை செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை நான் கீழே தள்ளியதில் காயம் அடைந்தார்.
அவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். அன்று எனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்த், கார்த்திக் ஆகிய 2 பேரின் உதவியோடு காமராஜ் முகத்தை கைகளால் அமுக்கி மூச்சுதிணறச் செய்ததில் மயங்கிவிட்டார். எனவே அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவருடைய காரில் காத்திருந்த கோகிலாவிடம் காமராஜ் தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார்.
இவ்வாறு கல்பனா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த்(26), கார்த்திக்(24) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். 2 பேரையும் போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கல்பனாவின் வளர்ப்பு மகள் சித்ரா என்பவரை தான் ஆனந்த் திருமணம் செய்து இருக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment