Saturday, September 13, 2014
திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த பாலிடெக் னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், “திருவொற்றியூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விளையாட்டு திடலில் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர் பாலசுப்பிரமணி தலைமையில் ஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். மோப்ப நாய் ஆனந்த் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என்று பார்த்தனர். பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து பார்த்த போதும் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை.
அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் பெருமூச்சு விட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த பாலிடெக் னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், “திருவொற்றியூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விளையாட்டு திடலில் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர் பாலசுப்பிரமணி தலைமையில் ஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். மோப்ப நாய் ஆனந்த் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என்று பார்த்தனர். பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து பார்த்த போதும் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை.
அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் பெருமூச்சு விட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment