Saturday, September 13, 2014
திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த பாலிடெக் னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், “திருவொற்றியூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விளையாட்டு திடலில் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர் பாலசுப்பிரமணி தலைமையில் ஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். மோப்ப நாய் ஆனந்த் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என்று பார்த்தனர். பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து பார்த்த போதும் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை.
அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் பெருமூச்சு விட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த பாலிடெக் னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், “திருவொற்றியூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருவொற்றியூர் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை வகுப்பறைகளை விட்டு வெளியேற்றி விளையாட்டு திடலில் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர் பாலசுப்பிரமணி தலைமையில் ஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். மோப்ப நாய் ஆனந்த் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என்று பார்த்தனர். பாலிடெக்னிக் கல்லூரி முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்து பார்த்த போதும் எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை.
அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் பெருமூச்சு விட்டனர். பின்னர் மதியம் 1.30 மணிக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பாலிடெக்னிக் கல்லூரியை விட்டு வெளியேறினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...

0 comments:
Post a Comment