Monday, September 01, 2014
மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து
சுண்டல், பொறி, கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தினர். விநாயகர்
கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள்
வழங்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment