Monday, September 01, 2014
மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து
சுண்டல், பொறி, கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தினர். விநாயகர்
கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள்
வழங்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...

0 comments:
Post a Comment