Monday, September 01, 2014
கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை மிரட்டி, கமிஷன்
கேட்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீது, போலீஸார் கடுமையான நடவடிக்கை
எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டடத் தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர்களை இடம்வாங்கித் தரும் புரோக்கர்கள் எனும் பெயரில் சிலர் மிரட்டி பணம் பறிப்பதாக, கடந்த ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரையில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், சமீப காலமாக கமிஷன் எனும் பெயரில், கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை கடத்தி சிலர் பணம் பறிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினத்தன்று (ஆக.15) மதுரையில் மலையரசன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தலுக்கு, இடம் வாங்கிய கமிஷன் பிரச்னையே காரணம் என்கிறார்கள் போலீஸார். அப்படியே இருந்தாலும், பிரச்னையை சட்டரீதியாக அணுக வேண்டுமே தவிர, கடத்திப் பணம் கேட்பது சட்டப்படி குற்றந்தானே.
இப்பிரச்னை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்தும், தொடர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். கடத்தல் கும்பல் பயன்படுத்திய வாகனம் போலியான பதிவெண் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களில் பலருக்கு தொலைபேசி மூலம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.
சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முதல்வர் அலுவலக மனுக்கள் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்து, சிறந்த மாநகர காவல்துறை ஆணையர் விருதுபெற்ற மதுரை ஆணையர் சஞ்சய் மாத்தூர், நிச்சயம் சட்டவிரோதக் கடத்தல் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதே மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து, ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்டபோது, நீண்ட காலமாக உள்ள கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், ஒருவரை சிலர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதையே கடத்தலாகக் கூறுகின்றனர். எனினும், இப்பிரச்னையில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கட்டடத் தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர்களை இடம்வாங்கித் தரும் புரோக்கர்கள் எனும் பெயரில் சிலர் மிரட்டி பணம் பறிப்பதாக, கடந்த ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரையில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், சமீப காலமாக கமிஷன் எனும் பெயரில், கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை கடத்தி சிலர் பணம் பறிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினத்தன்று (ஆக.15) மதுரையில் மலையரசன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தலுக்கு, இடம் வாங்கிய கமிஷன் பிரச்னையே காரணம் என்கிறார்கள் போலீஸார். அப்படியே இருந்தாலும், பிரச்னையை சட்டரீதியாக அணுக வேண்டுமே தவிர, கடத்திப் பணம் கேட்பது சட்டப்படி குற்றந்தானே.
இப்பிரச்னை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்தும், தொடர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். கடத்தல் கும்பல் பயன்படுத்திய வாகனம் போலியான பதிவெண் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களில் பலருக்கு தொலைபேசி மூலம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.
சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முதல்வர் அலுவலக மனுக்கள் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்து, சிறந்த மாநகர காவல்துறை ஆணையர் விருதுபெற்ற மதுரை ஆணையர் சஞ்சய் மாத்தூர், நிச்சயம் சட்டவிரோதக் கடத்தல் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதே மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து, ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்டபோது, நீண்ட காலமாக உள்ள கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், ஒருவரை சிலர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதையே கடத்தலாகக் கூறுகின்றனர். எனினும், இப்பிரச்னையில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
0 comments:
Post a Comment