Monday, September 01, 2014
கர்ப்பப் பையினுள் கட்டிகள் இருந்தால்,
கருத்தரிப்பில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, மதுரை மீனாட்சி மிஷன்
மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், குஜராத் மாநில
டாக்டர் திவ்யேஷ் சுக்லா தெரிவித்தார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
-
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட மகா காளியம்மன் கோயில...
0 comments:
Post a Comment