Monday, September 01, 2014
கர்ப்பப் பையினுள் கட்டிகள் இருந்தால்,
கருத்தரிப்பில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, மதுரை மீனாட்சி மிஷன்
மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், குஜராத் மாநில
டாக்டர் திவ்யேஷ் சுக்லா தெரிவித்தார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment