Monday, September 01, 2014
திருப்பூர், : விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் கடந்த 29ம் தேதி துவங்கியது. இதையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில், 1500க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த மாதம் 29ம் தேதி முதலே விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 750 சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலைகள், பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இருந்தும் மற்றும் செல்லம் நகரில் இருந்தும் என 3 இடங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான இந்துமுன்னணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஆலாங்காடு, நடராஜா தியேட்டர் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விசர்ஜன பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு பின்னர் அங்கிருந்து மீண்டும் சிலைகள் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் விசர்ஜனம் நடந்தது.
அனுப்பர்பாளையம் காவல்நிலையத்துக்குட்பட்ட ஸ்ரீநகர், திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்குட்பட்ட பெரியதோட்டம், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்குட்பட்ட கோல்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து, அந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீநகர், பெரியதோட்டம், கோல்டன் நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment