Monday, September 01, 2014
திருப்பூர், : விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் கடந்த 29ம் தேதி துவங்கியது. இதையொட்டி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில், 1500க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கடந்த மாதம் 29ம் தேதி முதலே விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 750 சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலைகள், பெருமாநல்லூர் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இருந்தும் மற்றும் செல்லம் நகரில் இருந்தும் என 3 இடங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான இந்துமுன்னணி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஆலாங்காடு, நடராஜா தியேட்டர் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விசர்ஜன பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு பின்னர் அங்கிருந்து மீண்டும் சிலைகள் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் விசர்ஜனம் நடந்தது.
அனுப்பர்பாளையம் காவல்நிலையத்துக்குட்பட்ட ஸ்ரீநகர், திருப்பூர் தெற்கு காவல்நிலையத்துக்குட்பட்ட பெரியதோட்டம், திருப்பூர் வடக்கு காவல்நிலையத்துக்குட்பட்ட கோல்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். இதையடுத்து, அந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்ரீநகர், பெரியதோட்டம், கோல்டன் நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment