Monday, September 01, 2014
பீஜிங்: சீனாவில் குடிபோதையில் ஏடிஎம்முக்கு சென்ற வாலிபர் அறைக்குள் சிக்கி கொண்டார். சீனாவின் கிழக்கே ஜிஜியாங் என்ற கடற்கரை பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள நகர் ஒன்றில் செங்கவோ என்ற 25 வயது வாலிபர் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நன்றாக குடித்துவிட்டு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதற்காக 3 முறை கார்டை வைத்து முயற்சி செய்தார். பணம் வரவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தவறான பாஸ்வேர்டு எண் போட்டதால், மெஷினில் கார்டு சிக்கிக்கொண்டது. மேலும் ஏடிஎம் அறையும் பூட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கண்ணாடியால் ஆன அறையை செங்கவோ கை யால் உடைக்க முயன்றார். முழு போதையில் இருந்ததால் அவரால் உடைக்க முடியவில்லை. கண்ணாடி அறைக்கு கீழே காற்று வரும் வழியாக செங்கவோ வெளியேற முயன்றார்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
பாதி உடல் வெளியே வந்த நிலையில் செங்கவோ மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கண்ணாடி கதவை உடைத்து செங்கவோவை மீட்டனர். இதுகுறித்து அப்பிராந்திய போலீசார் வழக்குப்பதிவு செங்கவோவை கைது செய்து விசாரித்தனர். கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு அவனது உடலில் வலு இருந்துள்ளது. எனினும், முழு போதையில் இருந்ததால் மயக்கமாகி விட்டான். கண்ணாடி கதவுகள் உடைந்து சேதமானதால், அவனிடம் தகுந்த நஷ்டஈடு வசூலிக்கப்படும் என்று சீன போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment