Tuesday, September 09, 2014
விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால் சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கம் கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. 2013–ம் ஆண்டு விமான நிலையத்தில் ரூ.13 கோடி தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.42 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினர்.
தங்கம் கடத்தலில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு பிடிபட்டனர். கொழும்பு, துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. தங்கம் கடத்தல் இந்தியாவில் பிற விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையத்தில் தான் அதிகமாக நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் அகர்வால் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக சந்திரசேகர் பதவி ஏற்றார். சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டவர்களுக்காக 6 பேர் வந்து பெண் சுங்க இலாகா அதிகாரியை மிரட்டினார்கள். இது தொடர்பாக விமான நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
இதைதொடர்ந்து விமான நிலைய சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு மத்திய கலால் பிரிவுக்கு மாற்றப்பட்டார். விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா பிரிவில் பணியாற்றும் மேலும் பலரை இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது. தங்கம் கடத்தல் சம்பவங்களை குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
.jpg)
0 comments:
Post a Comment