Saturday, September 13, 2014
காங்கயம் பகுதியில் தொடரும் ஆடு திருட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து, காங்கயம் போலீசார் ஆடு திருடப்படுவது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment