Saturday, September 13, 2014
காங்கயம் பகுதியில் தொடரும் ஆடு திருட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து, காங்கயம் போலீசார் ஆடு திருடப்படுவது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment