Tuesday, September 02, 2014
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
அதனால் பாஜகவுக்கு ஆதரவு தரலாமா என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திமுக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு போதிய அவகாசம் தராமல், ஜனநாயகத்துக்கு முரணாக மாநிலத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை தேமுதிகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர்களையும் சந்தித்து, பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தேமுதிக அதன் முடிவை உடனே தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனினும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் தேமுதிக உறுதியாக இருந்து வருகிறது.
பாஜகவுக்கு ஆதரவு? உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில், பாஜக போட்டியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது தொடர்பாக தேமுதிகவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2016-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் தற்போது சரியான ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விஜயகாந்த் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பதற்கு உரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல், தமிழகத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளன.
இந்தத் தேர்தல் ஜனநாயகரீதியாக நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment