Tuesday, September 02, 2014
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
அதனால் பாஜகவுக்கு ஆதரவு தரலாமா என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திமுக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு போதிய அவகாசம் தராமல், ஜனநாயகத்துக்கு முரணாக மாநிலத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை தேமுதிகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர்களையும் சந்தித்து, பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தேமுதிக அதன் முடிவை உடனே தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனினும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் தேமுதிக உறுதியாக இருந்து வருகிறது.
பாஜகவுக்கு ஆதரவு? உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில், பாஜக போட்டியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது தொடர்பாக தேமுதிகவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2016-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் தற்போது சரியான ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விஜயகாந்த் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பதற்கு உரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல், தமிழகத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளன.
இந்தத் தேர்தல் ஜனநாயகரீதியாக நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment