Friday, September 19, 2014

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் சிறு, நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் வருமானம் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்களின் வருவாய், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களைக் காட்டிலும் 15 சதவீதம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, நடுத்தரத் தொழில்களும் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட கையாள முடியும்.
சி.ஐ.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டு 1,200 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கருத்தரங்குகள் மூலமாக இந்தூர், ராஜ்கோட், நாக்பூர், புவனேஸ்வர், கவுஹாத்தி, கோட்டா, ஜாம்ஷெட்பூர், மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடர்பு கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக தயாரிப்புத் திறன், போட்டியிடும் திறன், வர்த்தக வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் திறன்பெற முடியும்.
சந்தை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதுடன் தொழில் திறமையையும் வளர்க்க முடியும்
எனவே, தகவல் தொழில்நுட்ப உபயோகம் பற்றிய இக்கருத்தரங்கிற்கு பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் தகுதியான மேலாளர்களை அனுப்பி வைக்குமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன். முன்பதிவுக்கு 82200-32005 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment