Friday, September 19, 2014

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் சிறு, நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் வருமானம் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்களின் வருவாய், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களைக் காட்டிலும் 15 சதவீதம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, நடுத்தரத் தொழில்களும் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட கையாள முடியும்.
சி.ஐ.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டு 1,200 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கருத்தரங்குகள் மூலமாக இந்தூர், ராஜ்கோட், நாக்பூர், புவனேஸ்வர், கவுஹாத்தி, கோட்டா, ஜாம்ஷெட்பூர், மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடர்பு கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக தயாரிப்புத் திறன், போட்டியிடும் திறன், வர்த்தக வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் திறன்பெற முடியும்.
சந்தை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதுடன் தொழில் திறமையையும் வளர்க்க முடியும்
எனவே, தகவல் தொழில்நுட்ப உபயோகம் பற்றிய இக்கருத்தரங்கிற்கு பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் தகுதியான மேலாளர்களை அனுப்பி வைக்குமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன். முன்பதிவுக்கு 82200-32005 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment