Wednesday, September 10, 2014

திருப்பூர், : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார், லீலாவதிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஓட்டல் தொழிலாளி சந்திரா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த பெண்ணை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்களாக தனியாக அடைத்து வைத்து போலீசார் சித்ரவதை செய்திருக்கின்றனர் என்ற விவரம் தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்திருக்கிறது. போலீசார் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியும், தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்தும், நகக்கண்களில் ஊசியை குத்தியும் கொடுமைப்படுத்தியதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்துள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
காவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்காக ஒருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றால் அது குறித்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் தங்க வைக்கக்கூடாது, கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை தமிழக காவல்துறை துளிகூட மதிப்பதில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த மாவட்ட காவல்துறை மூலம் மேற்கண்ட சம்பவத்தை விசாரணை செய்தால் உண்மைச் சம்பவம் வெளிவராது. மேலும் சந்திராவின் குடும்பத்தாரிடம் சமரசம் பேசியும், மிரட்டியும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு தவறிழைத்த காவலர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment