Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    







சென்னை: தனியார் பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு சேவை வரியையும் உயர்த்தி அறிவித்துள்ளதால், தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் இயஙகும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இன்றிலிருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக ஆம்னி பஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் தேதியில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனடிப்படையில் தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்

0 comments: