Friday, September 19, 2014
கோவை மேயர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி, வாக்குச்சாவடி அருகே பாரதீய ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாரதீய ஜனதாவினர் எதிர்ப்பு
கோவையை அடுத்த துடியலூர் 1–வது வார்டு பகுதியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு நடைபெற்றுகொண்டிருந்தது.அப்போது அந்த பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் நின்றுகொண்டு அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பதாக பாரதீய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த அ.தி.மு.க.வினருக்கும், பாரதீய ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவ பகுதிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர் நந்தகுமார் வந்து பார்வையிட்டார். அவர் கூறும்போது, வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் துடியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் குவிந்து நின்று வாக்குச்சாவடி அருகே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கள்ள ஓட்டு போட முயற்சி
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ராமசாமி பள்ளியில் 32–வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை பிடித்து பாரதீய ஜனதா பிரமுகர் சந்திரன் என்பவர் போலீசில் ஒப்படைத்தார். அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் ஆவார். துடியலூர் போலீசார் அவரை வேனில் ஏற்றி சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவை 32–வது எண் வாக்குச்சாவடியில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கூறி, பாரதீய £னதா கட்சியினர் வாக்குச்சாவடி அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட கூடுதல் துணைசூப்பிரண்டு அதிவீரபாண்டியன், மற்றும் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்கள். சம்பவ இடத்துக்கு பாரதீயஜனதா மாநில செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரும் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
துடியலூர் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை முதல் மாலைவரை இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment