Friday, September 19, 2014
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகி உண்ணிகிருஷ்ணன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி போனசாக ஊதியத்தின் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். மேலும் சில தனியார் நிறுவனங்கள் போனஸ் தொகையை தர மறுக்கின்றன. இதனால் போனஸ் தராத உரிமையாளர்களை எதிர்த்து அவினாசி, காங்கயம், திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மத்திய அரசால் வழங்கப்படும் நெசவாளர் கடன் அட்டை திட்டப்படி வழங்க வேண்டிய ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் 100 நாள் வேலைப்படி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் திட்டப்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தறிக்கூடத்துடன் கூடிய பசுமை வீட்டு திட்டத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment