Friday, September 19, 2014
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகி உண்ணிகிருஷ்ணன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி போனசாக ஊதியத்தின் 10 சதவீதத்தை வழங்க வேண்டும். மேலும் சில தனியார் நிறுவனங்கள் போனஸ் தொகையை தர மறுக்கின்றன. இதனால் போனஸ் தராத உரிமையாளர்களை எதிர்த்து அவினாசி, காங்கயம், திருப்பூர் தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மத்திய அரசால் வழங்கப்படும் நெசவாளர் கடன் அட்டை திட்டப்படி வழங்க வேண்டிய ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் 100 நாள் வேலைப்படி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் திட்டப்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தறிக்கூடத்துடன் கூடிய பசுமை வீட்டு திட்டத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...

0 comments:
Post a Comment