Friday, September 19, 2014
கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment