Friday, September 19, 2014
கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment