Friday, September 19, 2014
கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment