Saturday, September 13, 2014
சோழவந்தானில் நூலகம் கடந்த 1958–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் போட்டித் தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், கலை, இலக்கியம், கவிதை, கட்டுரை, வரலாறு, புவியியல், மற்றும் குடும்ப பெண்கள், மாணவிகள் படிக்கும் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர்களுக்கு தேவையான நீதிக்கதைகள், என்சைக்ளோபீடியா, கம்யூட்டர் சம்பந்தமான ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இந்த நூலகத்திற்கு தினசரி இதழ்கள்–6, வார இதழ்கள்–8, மாத இதழ்கள்–69, காலாண்டு இதழ்–2 மற்றும் தபால் மூலம் 14 இதழ்களும் வருகின்றன. நூலக உறுப்பினர்களாக சுமார் 3700 பேர் உள்ளனர். முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவம், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட 38 பேர் புரவலராக உள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 140 வாசகர்கள் வந்து செல்கின்றனர்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த நூலகம் 1985–ம் ஆண்டு இரண்டாம் நிலை நூலகமாக மாறியது. கடந்த 2006 முதல் வாடிப்பட்டி தாலுகா நூலகங்களுக்கு “ஊதியம் வழங்கும் மையமாக” செயல் பட்டு வருகிறது. நிரந்தரம் மற்றும் தினக்கூலி பணியாளர்களாக 4 பேர் உள்ளனர்.
கடந்த சில ஆண்டிற்கு முன் இங்கு வந்த கம்யூட்டர் இணைய வசதி போதிய இடவசதி இல்லாமல் மற்றொரு நூலகத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழைய கட்டிடமாக உள்ளதால் மழை காலங்களில் ஒழுகி புத்தகங்கள் நனையும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பையாவிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு புதிய கட்டி டம் கட்டி தர, நூலகர் ஆறுமுகம் மூலம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கருப்பையா எம்.எல்.ஏ., “நான் சட்டமன்ற நூலக குழு உறுப்பினராகவும் உள்ளதால் தமிழக முதல்வரிடமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமும் எடுத்துக்கூறி விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, யூனியன் சேர்மன் அன்னக் களஞ்சியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
0 comments:
Post a Comment