Saturday, September 13, 2014
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து
சிகிச்சை பெற்று செல்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இங்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஒரு வாலிபர் பச்சிளம் ஆண் குழந்தையுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது. எடை குறைவாக உள்ளது. மேலும் நோய் தாக்கப்பட்டுள்ளதாக கூறி அக்குழந்தையை ஆஸ்பத்திரியின் 155–வது வார்டில் சேர்த்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அந்த குழந்தை மட்டும் வார்டில் இருந்தது. குழந்தையை கொண்டு வந்த வாலிபரை காணவில்லை.
அப்போது அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்த நிலையில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்தனர். குழந்தையின் தாயை அழைத்து வருவதாக கூறி சென்ற அந்த வாலிபர் இன்று காலை 10 மணி வரை திரும்பவில்லை. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரமக்குடி முஸ்லிம் தெரு சைரா பானு என்ற விலாசம் கொடுத்திருந்தார்.
தனது பெயர் நிஜாம் என்றும், 2 செல்போன் எண்களையும் கொடுத்து இருந்தார். ஒரு எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது போனில் பேசிய ஆசாமி தனது பெயர் சாகுல்அமீது, புதுக்கோட்டை என்றார்.
பின்னர் அந்த வாலிபர் போலீசாரிடம் கூறியதாவது:–
எனது நண்பர்தான் நிஜாம். டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இதனை தொடர்ந்து அவர் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகும் என்பதால் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு வந்துள்ளார். குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நிஜாம் குழந்தையை போட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
இவ்வாறு அவர் போனில் தெரிவித்துள்ளார்.
போனில் சாகுல்அமீது கூறிய தகவல் உண்மையானதுதானா? குழந்தையை போட்டு விட்டு சென்ற நிஜாம் எங்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பச்சிளம் குழந்தையை வாலிபர் ஆஸ்பத்திரியில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment