Tuesday, September 02, 2014
தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனு:
மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்காக சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தான் கல்லூரிக்கு இணைவிப்பு பெறப்பட்டுள்ளது.
கல்லூரி அருகே ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 44 சென்ட் நிலத்தை சம்பத் என்பவரிடம் இருந்து வாங்கினோம். அந்த இடம் ஆதிலட்சுமியிடம் இருந்து வேலுச்சாமி பண்டாரம் நிலம் பரிமாற்ற முறையில் பெற்றிருந்தார். பிறகு அவரிடமிருந்து சம்பத் வாங்கியுள்ளார்.
எனவே, நிலம் வாங்கியதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் .வெள்ளிரவெளி ஊராட்சி தேவனம்பாளையம் நாச்சியம்மன் செங்குந்த திருமணமண்டபத்தில்1330பயனாளிகளுக்க...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
Sir/Madam The Birth Anniversary of 'Suyamariyathai Sudar' M.A.Shanmugam will be celebrated on behalf of Government of Puducherry ...
-
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு ...
-
அஞ்சான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இசை வெ...
0 comments:
Post a Comment