Monday, September 29, 2014
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீர்ப்பு குறித்து புதிய கருத்து கூற விரும்பவில்லை. இந்த தண்டனை மூலம் அவர் அரசியலில் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்டனை மூலம் கர்நாடகா, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ அல்ல. சுப்பிரமணியசாமி.
தீர்ப்பு கூறியதுதான் கர்நாடக நீதிபதி. அ.தி.மு.க.வினர் தலைமை மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். ஆனால் நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது. புதியதாக பொறுப்பு ஏற்கும் முதல்–அமைச்சர் தமிழகத்தில் உள்ள வறட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 25 முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 6–ந்தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 16–ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment