Saturday, October 18, 2014
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்க உடன்பாடு காணப்பட்டது.
சக்தி நிறுவனத் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு போனஸ் வழங்குவது குறித்து நிர்வாகத்துக்கும் சிஐடியு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தரப்பில் முதுநிலைத் துணைத் தலைவர் (மனிதவளம்) முத்துவேலப்பன், துணைப் பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே.ஆர்.ராஜேந்திரன், துணை மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் (தொழிலாளர் நலப்பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மகாலிங்கம், பொதுச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, துணைச் செயலாளர் கே.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நடப்பு ஆண்டு தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்குவதென்று முடிவு காணப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.66 சதவிகிதம் உயர்வு ஆகும். ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கும். நிரந்தரத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இதில் பயனடைவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment