Saturday, October 18, 2014
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்க உடன்பாடு காணப்பட்டது.
சக்தி நிறுவனத் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு போனஸ் வழங்குவது குறித்து நிர்வாகத்துக்கும் சிஐடியு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தரப்பில் முதுநிலைத் துணைத் தலைவர் (மனிதவளம்) முத்துவேலப்பன், துணைப் பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே.ஆர்.ராஜேந்திரன், துணை மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் (தொழிலாளர் நலப்பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மகாலிங்கம், பொதுச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, துணைச் செயலாளர் கே.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நடப்பு ஆண்டு தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்குவதென்று முடிவு காணப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.66 சதவிகிதம் உயர்வு ஆகும். ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கும். நிரந்தரத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இதில் பயனடைவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment