Thursday, October 02, 2014

On Thursday, October 02, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் கல்லூரி சாலை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி அதிகாலை நேரத்தில் மதுவிற்பனை செய்து கொண்டு இருந்தனர். இது தொடர்பாக பார் ஊழியர் சிவகங்கையை சேர்ந்த ரவியை(வயது 23) கைது செய்து 11 பாட்டில் மது மற்றும் ரூ.1,750 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: