Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டை காட்ட வேண்டும், எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்ளவேண்டும் மற்றும் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் துப்பாக்கி சூடு தொடர்பாக சீனா வெளியுறவுத் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ பேசுகையில் “நிலைமையை சீனா மிகவும் கவனத்துடன் கவனித்து வருகிறது. அண்டைய மற்றும் நண்பர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு பக்கங்களிலும் கட்டுப்பாட்டை காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளும் துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும். பிரச்சனையை தீர்க்க இருநாடுகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.” என்றார். மேலும், ஹாங் பேசுகையில், தெற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை பாதுகாக்க அவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.

0 comments: