Thursday, October 09, 2014

மயிலாடுதுறை நெல்லை பாசஞ்சர் ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மதுரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
ஈரோடு–மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில் நிலைய 3–வது பிளாட்பாரத்திற்கு நேற்று மாலை 5.55 மணிக்கு வந்தது.
அந்த ரெயிலின் பயணிகளில் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் சென்று, 4–வது பெட்டியின் கழிவறையில் யாரோ ‘மர்ம’ நபர்கள் உள்ளனர். சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க மறுக்கின்றனர் என கூறினர்.
இதனால் பதற்றமடைந்த ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டியின் கழிவறையை தட்டிப் பார்த்தனர். உள்ளுக்குள் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. இதனால் கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடிவு செய்தனர். அதன்படி கடப்பாரையை வைத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அந்த வாலிபரை மீட்பதற்காக கழிவறை கதவையும் உடைத்தனர். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்து மீட்டு பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் சுயநினைவுக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரவி (வயது23), ஈரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில், மாலை 6.45 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment