Thursday, October 09, 2014

மயிலாடுதுறை நெல்லை பாசஞ்சர் ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மதுரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
ஈரோடு–மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில் நிலைய 3–வது பிளாட்பாரத்திற்கு நேற்று மாலை 5.55 மணிக்கு வந்தது.
அந்த ரெயிலின் பயணிகளில் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் சென்று, 4–வது பெட்டியின் கழிவறையில் யாரோ ‘மர்ம’ நபர்கள் உள்ளனர். சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க மறுக்கின்றனர் என கூறினர்.
இதனால் பதற்றமடைந்த ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டியின் கழிவறையை தட்டிப் பார்த்தனர். உள்ளுக்குள் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. இதனால் கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடிவு செய்தனர். அதன்படி கடப்பாரையை வைத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அந்த வாலிபரை மீட்பதற்காக கழிவறை கதவையும் உடைத்தனர். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்து மீட்டு பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் சுயநினைவுக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரவி (வயது23), ஈரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில், மாலை 6.45 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
0 comments:
Post a Comment