Saturday, October 18, 2014
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்துகொள்ளலாம்.ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் இன்று(சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...

0 comments:
Post a Comment