Thursday, October 16, 2014
திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூட்டுப் போட பெண்கள் கோபாவேச போராட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முடிவுப்படி திருப்பூரில் செவ்வாயன்று காலேஜ் ரோடு சந்திரகாவி மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு முன்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலேயே அணிதிரண்டனர். இந்த போராட்ட அறிவிப்பதைத் தொடர்ந்து காவல் துறையின் மாநகர துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பெண்கள் மதுபான போதையால் ஏற்படும் பாதிப்புகளை கூறியபடி கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செல்வி, துணைச் செயலாளர்கள் தேவி, சுதா, பொருளாளர் நிர்மலா, மாநகரக்குழு உறுப்பினர்கள் சுனிதா, பிந்து, சுமதி, அம்சவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் தடுப்பு அரணைத் தாண்டி மதுபானக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக முழக்கமிட்டபடி மாதர் சங்க நிர்வாகிகள் கடை நுழைவாயில் பகுதியில் புகுந்தனர். உடனடியாக காவல் துறையினர் திரண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி காவிரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
0 comments:
Post a Comment