Thursday, October 16, 2014
திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூட்டுப் போட பெண்கள் கோபாவேச போராட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முடிவுப்படி திருப்பூரில் செவ்வாயன்று காலேஜ் ரோடு சந்திரகாவி மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு முன்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலேயே அணிதிரண்டனர். இந்த போராட்ட அறிவிப்பதைத் தொடர்ந்து காவல் துறையின் மாநகர துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பெண்கள் மதுபான போதையால் ஏற்படும் பாதிப்புகளை கூறியபடி கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செல்வி, துணைச் செயலாளர்கள் தேவி, சுதா, பொருளாளர் நிர்மலா, மாநகரக்குழு உறுப்பினர்கள் சுனிதா, பிந்து, சுமதி, அம்சவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் தடுப்பு அரணைத் தாண்டி மதுபானக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக முழக்கமிட்டபடி மாதர் சங்க நிர்வாகிகள் கடை நுழைவாயில் பகுதியில் புகுந்தனர். உடனடியாக காவல் துறையினர் திரண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி காவிரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment