Thursday, October 16, 2014
திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூட்டுப் போட பெண்கள் கோபாவேச போராட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முடிவுப்படி திருப்பூரில் செவ்வாயன்று காலேஜ் ரோடு சந்திரகாவி மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு முன்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலேயே அணிதிரண்டனர். இந்த போராட்ட அறிவிப்பதைத் தொடர்ந்து காவல் துறையின் மாநகர துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பெண்கள் மதுபான போதையால் ஏற்படும் பாதிப்புகளை கூறியபடி கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செல்வி, துணைச் செயலாளர்கள் தேவி, சுதா, பொருளாளர் நிர்மலா, மாநகரக்குழு உறுப்பினர்கள் சுனிதா, பிந்து, சுமதி, அம்சவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் தடுப்பு அரணைத் தாண்டி மதுபானக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக முழக்கமிட்டபடி மாதர் சங்க நிர்வாகிகள் கடை நுழைவாயில் பகுதியில் புகுந்தனர். உடனடியாக காவல் துறையினர் திரண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி காவிரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment